போராடினால் மறக்க முடியாத தொடராக இருக்கும்: இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் கம்பீர் எழுச்சி உரை

பெக்கன்ஹாம், ஜூன் 13- ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர் வீரர்​கள் மத்​தி​யில் உரை​யாடு​வதை பிசிசிஐ தனது இணை​யதளத்​தில் வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளது. அதில் கவுதம் கம்​பீர் கூறும்​போது, “இந்த சுற்​றுப்​பயணத்தை இரண்டு வித​மாகப் பார்க்​கலாம். ஒன்​று, மிக​வும் அனுபவம் வாய்ந்த எங்​களது 3 வீரர்​கள் (ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரவிச்​சந்​திரன் அஸ்​வின்) ஆகியோர் இல்​லாமல் இருக்​கிறோம் அல்​லது நாட்​டிற்​காக ஏதாவது சிறப்​பாகச் செய்ய இந்த அற்​புத​மான வாய்ப்​பைப் பெற்​றுள்​ளோம். தற்​போதைய டெஸ்ட் அணி​யில், ஏதாவது சிறப்​பாக செய்ய வேண்​டும் என்ற பசி, ஆர்​வம் மற்​றும் அர்ப்​பணிப்பு இருப்​பதை காண்​கிறேன். நாம் தியாகங்​களைச் செய்​தால், நமது சவு​கரிய​மான இடத்​தில் இருந்து வெளியே வந்​தால், ஒவ்​வொரு நாளும் அல்ல, ஒவ்​வொரு செஷனிலும், ஒவ்​வொரு மணி நேரத்​தி​லும், ஒவ்​வொரு பந்​தி​லும் போராடத் தொடங்​கி​னால், நாம் ஒரு மறக்​க​முடி​யாத சுற்​றுப்​பயணத்தை மேற்​கொள்ள முடி​யும். முதல் டெஸ்ட் போட்​டிக்​கான அழைப்​பு​கள் எப்​போதும் சிறப்பு வாய்ந்​தவை, எனவே பேட்​டிங்​கில் மூன்று மாதங்​கள் அற்​புத​மான அனுபவத்​தைக் கொண்ட சாய் சுதர்​சனை வரவேற்க விரும்​பு​கிறேன். நீங்​கள் மிக​வும் வெற்​றிகர​மான டெஸ்ட் கிரிக்​கெட் வாழ்க்​கையை பெறு​வதை உறு​தி​செய்ய விரும்​பு​கிறேன். அர்​ஷ்தீப் சிங்​கை​யும் வரவேற்க விரும்​பு​கிறேன். வெள்ளை பந்​தில் நீங்​கள் அற்​புத​மாக செயல்​பட்​டுள்​ளீர்​கள். சிவப்பு பந்தை கையில் எடுத்து நீங்​கள் வெற்றி பெறு​வீர்​கள் என்று நான் நம்​பு​கிறேன். முதல் முறை​யாக கேப்​ட​னாக செயல்பட உள்ள ஷுப்​மன் கில்​லை​யும் வாழ்த்த விரும்​பு​கிறேன். டெஸ்ட் அணியை வழிநடத்​து​வதை விட பெரிய மரி​யாதை எது​வும் இல்​லை. இப்​போது தலை​மைத்​து​வக் குழு​வில் ஒரு பகு​தி​யாக இருக்​கும் ரிஷப் பந்த்​துக்​கும் வாழ்த்​துக்​கள். இந்​திய அணிக்​குள் மீண்​டும் வரு​வது ஒரு​போதும் எளி​தானதல்ல, ஏழு ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும் வந்த ஒரு​வர் (கருண் நாயர்), கடந்த ஆண்டு உள்​ளூர் கிரிக்​கெட்​டில் அற்​புத​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னார்.