மும்பை, டிசம்பர் 4-
பெரும் இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வர்த்தக தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற கோர் கமிட்டி கூட்டத்தில் ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற்று, மஹாயுதி கூட்டணியில் ஆட்சி அமைக்க நடைபெற்று வந்த நிகழ்வுகள் தற்போது சம்பிரதாயப்படி நிறைவடைந்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முதல்வர் விஜய ரூபானி ஆகியோர் டெல்லியில் இருந்து பார்வையாளர்களாக மும்பைக்கு புறப்பட்டனர், இன்று பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் ஃபட்னாவிஸை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யவுள்ளது.
தற்போது முதல்வர் தேர்வு விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது யாருக்கு அமைச்சர்கள் மற்றும் சக்திவாய்ந்த இலாகாக்கள் வழங்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மகாயுதி கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் பதவியை பா.ஜ.,வுக்கு விட்டுக்கொடுக்கும் வகையில், சிவசேனா, ஷிண்டே கோஷ்டிக்கு முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து மகாயுதி கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்தி ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள்.
நவம்பர் 20-ம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 288 இடங்களில் 132 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பாஜக-சிவசேனா-என்சிபி கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஆட்சியைப் பிடிக்க முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் முன்னணியில் இருந்தது.
பாஜகவின் மூத்த தலைவர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் அடுத்த முதல்வர் என்று ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்திருந்தனர் ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மகாராஷ்டிர முதல்வர் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பார்வையாளர் விஜய் ரூபானி, “அரசாங்கம் அமைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் விவாதம் நடத்தப்படும். பெயர் இறுதி செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.