மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா செய்ய விருப்பம்

கண்ணூர்: அக்டோபர் 13-
கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார்.
இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம் பேசி​ய​தாவது:நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை. அமைச்​ச​ரான பிறகு எனது சினிமா வரு​மானம் கணிச​மான அளவில் குறைந்​துள்​ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்​சர் பதவி​யில் இருந்து விலக விருப்​பம் தெரி​வித்​துள்​ளேன்.
அமைச்​சர் பதவி​யில் இருந்து என்னை நீக்​கிய பிறகு சதானந்​தன் மாஸ்டரை அமைச்​ச​ராக்க வேண்​டும் என்று நான் இங்கே மனதா​ரக் கூறுகிறேன். இது கேரள அரசி​யல் வரலாற்​றில் ஒரு புதிய அத்​தி​யாய​மாக மாறும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்​.