சென்னை: “எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித் கூறியது: “எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடும் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி குறை கூறுகிறார்கள். காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம். நான் இங்கு தத்துவம் பேசவில்லை.
எனக்கு பல அறுவை சிகிச்சைகளும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. புற்றுநோயிலிருந்து தப்பிய பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு உள்ளனர். வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாம் அறிவோம். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நான் பயன்படுத்த விரும்புகிறேன். அதை மிக அதிகமாக பயன்படுத்த விரும்புகிறேன்.