மரக்கட்டைகளுடன் மறைத்து லாரிகளில் போன டிரோன்கள்

மாஸ்கோ, ஜூன் 2- ரஷ்யாவின் 4 விமான தளங்கள் மீது உக்ரைன் மிகெப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் சக்தி வய்ந்த வான் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதலை நடத்தி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது உக்ரைன். டிரக்குகளில் மரக்கட்டைகளுக்குள் டிரோன்களை வைத்து ரஷ்யாவுக்குள் கடத்தி கொண்டு சென்று பின்னர் ரிமொட் மூலமாக ஆபரேட் செய்யப்பட்டு டிரோன்களை தாக்க ஏவப்பட்டுள்ளது. ஆபரேஷன் ஸ்பைடர் என்ற பெயரில் இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் ரஷ்யா, உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டது.
உக்ரைன் ரஷ்யா போர் சிறிய நாடுதானே என நினைத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் கடுமையான பதிலடி கொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை அளித்தன. இதனை வைத்து ரஷ்யாவுக்கு உக்ரைன் தண்ணீர் காட்டியது. உக்ரைனில் சில இடங்களை ரஷ்யா கைப்பற்றினாலும் கூட ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த அளவு போரில் வெற்றி கிட்டவில்லை. தண்ணீர் காட்டிய உக்ரைன் இதனால், மூன்றாவது ஆண்டாக உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரால் பெருமளவு உயிர்சேதம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அமெரிக்க டிரம்ப் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்து வந்த அதிபர் புதின், சமீபத்தில் தானாக போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர், இருநாட்டு முக்கிய பிரமுகர்கள், துருக்கி நாட்டின் தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால் போர் நிறுத்தம் செய்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை. ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதல் போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க் கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது. ஆனாலும் உக்ரைன் மீது கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் தருணத்தில் ரஷ்யாவின் இந்த மிகப்பெரிய தாக்குதலால் அமெரிக்காவும் கோபம் அடைந்தது.