மருத்துவமனை தீ விபத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: நவ. 16: மருத்துவமனையில் தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
உ.பி., மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். இதில் சில குழந்தைகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையின் வெளியே குழந்தைகளின் பெற்றோர் மன உடைந்து நிற்கும் வீடியோ காட்சிகள் கவலை அடைய செய்கிறது. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டி.ஐ.ஜி., அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ‘இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணமடைய ராமரை பிரார்த்தனை செய்கிறேன்’ என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.