மேம்பாலத்தில் தொடர் விபத்து போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு, நவ. 22: எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலம் சாலையில் நேற்று இரவு தொடர் விபத்து ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேகமாக வந்த கார், முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது, அதையொட்டி மற்றொரு ஃபார்ச்சூனர் கார் மீது மோதியது. இதனால், மூன்று கார்கள், பைக் இடையே தொடர் விபத்துகள் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
தொடர் விபத்துகளால், மேம்பாலம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் துாரத்துக்கு வாகனங்கள் நின்று செல்வதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலம் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டு எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.