ராஜஸ்தானில் ஒரு எருமைக்கு உரிமை கோரிய 2 பேர்

கோட்டா: ஜனவரி 5-
ராஜஸ்​தானில் ஒரு எருமை மற்​றும் அதன் கன்​றுக்​குட்​டிக்கு 2 பேர் உரிமை கொண்​டாடியதையடுத்து இந்த சர்ச்​சைக்கு மருத்​துவ அறிக்கை மூலம் தீர்வு காணப்​பட்​டது.
இதுகுறித்து காவல் துறை​யினர் கூறிய​தாவது: நாராயண் விஹாரைச் சேர்ந்த ராம் லால் என்​பவர் தான் வளர்த்த எருமை மற்​றும் கன்​றுக்​குட்டி ஒரு மாதத்​துக்கு முன் காணா​மல் போன​தாக புகார் அளித்​தார். அவரும் விடா​மல் தேடிவந்த நிலை​யில் இரு நாட்​களுக்கு முன்பு அதே பகு​தி​யில் ராம்​சந்​திரபுரா மர்​கியா பஸ்​தி​யில் வசிக்​கும் இந்​திரஜித் கேவத் என்​பவரின் கொட்​டகை​யில் எருமை மாட்​டுடன் அதன் கன்​றுக்​குட்​டி​யும் கட்​டப்​பட்​டிருந்​ததை பார்த்​தார்.
உடனடி​யாக, ராம் லால், இந்​திரஜித் கேவத்தை சந்​தித்து அந்த மாடு​கள் தனக்கு சொந்​த​மானவை என்று உரிமை கோரி​னார். ஆனால், இந்​திரஜித் இரண்டு ஆண்​டு​களுக்கு முன்பு படி கிராமத்​தில் இருந்து அந்த எரு​மையை வாங்​கிய​தாக​வும் அதற்கு தற்​போது 7 வயது ஆவதாக​வும் கூறி​னார்.
தங்​களது வாதங்​களை முன்​வைத்தனர். ராம் லால் அந்த எரு​மைக்கு சுமார் 4-5 வயது ஆகிறது என்​றும் அது சமீபத்​தில்​தான் கன்று ஈன்​றது என்​றும் கூறி​னார். அதேசம​யம், இந்​திரஜித் அந்த எரு​மைக்கு 7 வயது ஆவதாக கூறி​னார்.