ரூ.12-ல் இருந்து ரூ.15,000 கோடி சாம்ராஜ்யம்… ஊழியர்களுக்கு கார், வீடு பரிசளிக்கும் ‘வைர ராஜா’

சூரத்: பிப்ரவரி 17-
வெறும் 12 ரூபா​யுடன் சூரத் நகருக்கு வந்த ஒரு கிராமத்து சிறு​வன், இன்று 15,000 கோடி ரூபாய் மதிப்​பிலான ஒரு மாபெரும் வைர வியா​பார சாம்​ராஜ்​யத்தை உரு​வாக்​கி​யுள்​ளார். அவர்​தான் ‘ஹரி​கிருஷ்ணா எக்​ஸ்​போர்ட்​டர்​ஸ்’ நிறு​வனர் சாவ்ஜி தோலக்கியா.குஜ​ராத் மாநிலம் அம்​ரேலி மாவட்​டத்​தில் உள்ள துதாலா கிராமத்தில் பிறந்த சாவ்ஜி, 12 வயதில் வெறும் 12 ரூபா​யுடன் சூரத்தில் காலடி எடுத்து வைத்​தார். வைரத் தொழிலில் சாதாரணத் தொழிலா​ளி​யாகத் தொடங்​கி, பின்​னர் தனது சித்தப்பா​வின் நிதி உதவி​யுடன் சொந்​தத் தொழிலைத் தொடங்கினார். இன்று அவரது நிறு​வனம் ஆண்​டுக்கு ரூ.15,000 கோடிக்​கும் மேல் வர்த்​தகம் செய்​யும் மாபெரும் நிறு​வன​மாக உயர்ந்​துள்​ளது. இன்று இந்​தி​யா​வின் ‘வைர ராஜா’ என்று அழைக்கப்​படு​கிறார்.
சாவ்ஜி தோலக்​கியா வெறும் தொழில​திப​ராக மட்​டுமல்​லாமல், தனது ஊழியர்​களுக்கு வாரி வழங்​கும் வள்​ளலாக​வும் அறியப்படுகிறார். ஒவ்​வொரு ஆண்​டும் தீபாவளிப் பண்டிகையின்​போது, தனது நிறு​வனத்​தில் சிறப்​பாகப் பணியாற்றும் ஊழியர்​களுக்கு கார், அடுக்​கு​மாடி குடி​யிருப்பு மற்றும் வைர நகைகளைப் பரி​சாக வழங்கி உலக நாடு​களின் கவனத்தை ஈர்த்து வரு​கிறார்.“நான் பணிபுரி​யும் நிறு​வனம் என் நலனில் அக்​கறை கொண்டிருக்​கிறது என்​பதை ஊழியர்​கள் உணரும்​போது, அவர்கள் வேலை​யிலும் வாழ்​விலும் சிறப்​பாகச் செயல்படுவார்கள். நிறு​வனத்​தின் வளர்ச்​சிக்கு உதவியவர்களுடன் வெற்​றியைப் பகிர்ந்து கொள்​ள எனது லாபத்தைக் குறைத்​துக் கொள்​வ​தில் மகிழ்ச்​சி​யே” என்கிறார்.கடந்த ஜனவரி 1ம் தேதி சாவ்ஜி தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில், “வெற்றி என்​பது சத்​தத்​தால் அளவிடப்​படு​வ​தில்​லை; அது நமது விடா​முயற்​சி, நோக்​கம் மற்​றும் விழு​மி​யங்​களால் அளவிடப்படுகிறது. ஒரு புதிய ஆண்டு என்​பது நாம் சற்று நிதானித்​து, உண்​மை​யில் நமக்கு எது முக்​கி​யம் என்​ப​தைச் சிந்திப்​ப​தற்​கான வாய்ப்​பு” என பதி​விட்​டிருந்​தார்.தற்​போது 50 ஏக்​கரில் பிரம்​மாண்​ட​மான வீட்​டில் சாவ்ஜி வசிக்கிறார். மூன்று தலை​முறை​களைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் 64 பேரும் ஒரே கூரை​யின் கீழ் வசிக்கின்​றனர். இதுவே வாழ்​நாள் கனவு என்று அவர் பெரு​மை​யுடன் கூறுகிறார்.
வெறும் வியா​பாரத்​துடன் நின்​று​வி​டா​மல், குஜ​ராத்​தின் தண்​ணீர் பஞ்​சத்​தைப் போக்க தனது சொந்த கிராம​மான துதாலா உட்பட மாநிலம் முழு​வதும் பல ஏரி​களை உரு​வாக்​கி, ஒரு சிறந்​த சமூக தொழில்​முனை​வோ​ராக​வும்​ அவர்​ ​திகழ்​கிறார்​.