திருப்பதி: டிசம்பர் 21
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்தகான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி, ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையானை துளசி மாலை அலங்காரத்தில் தரிசிக்க இத்தனை மணி நேரமா? “ அதன்படி மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் டிசம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன ரூ 300 டிக்கெட்டுகள் வரும் 26ஆம் தேதி காலை 11 மணிக்கும் வெளியிடப்படும். அது போல் திருமலையில் உள்ள தங்கும் அறைகள் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான கோட்டாக்கள் வெளியிடப்படும்.
திருமலையில் மட்டுமில்லை திருப்பதியிலும் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.