Home செய்திகள் தேசிய செய்திகள் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை

புதுடெல்லி, ஜூலை 18- வந்தே மாதரம் பாடலை அவம​தித்​தால் அல்​லது அதை தடுத்​தால் 3 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை மற்​றும் அபராதம் வழங்க வகை செய்​யும் புதிய மசோ​தாவை வரும் நாடாளு​மன்ற கூட்​டத் தொடரில் மத்​திய அரசு தாக்​கல் செய்கிறது. தேசி​யப் பாடலான வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கும் அதை பாடு​வதற்கு தடை ஏற்​படுத்​து​வோருக்​கும் தண்​டனை வழங்​கும் தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு சட்​டத் திருத்த மசோ​தாவுக்கு மத்​திய அமைச்​சரவை ஏற்கெனவே ஒப்​புதல் அளித்துள்ளது. தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்​லது பாடு​வதை கட்​டாய​மாக்கி மத்​திய உள்​துறை அமைச்​சகம் வெளி​யிட்ட வழி​காட்​டு​தல்​களைத் தொடர்ந்து மத்​திய அமைச்​சரவை இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளித்​தது. திங்​கட்​கிழமை (ஜூலை 20) தொடங்​கும் நாடாளுமன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரில் இந்த மசோதா கொண்​டு​வரப்பட உள்ளதாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. உள்​துறை அமைச்​சர் அமித்ஷா இந்த மசோதாவை நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​ய​விருக்​கிறார்.