விஜய் ஹசாரே டிராபி தொடக்​கம்

பெங்​களூரு, டிச. 24- விஜய் ஹசாரே டிராபிக்​கான தேசிய ஒரு​நாள் போட்டி கிரிக்​கெட் தொடர் இன்று (டிசம்​பர் 24) நாட்​டின் பல்​வேறு நகரங்​களில் தொடங்​கு​கிறது.
உள்​ளூர் தொட​ரான இதில் இந்​திய அணிக்​காக விளை​யாடும் அனைத்து வீரர்​களும் குறைந்​த​பட்​சம் 2 போட்​டிகளில் கட்​டா​யம் பங்​கேற்க வேண்​டும் என பிசிசிஐ உத்​தர​விட்​டிருந்​தது. இதனால் இந்​திய அணி​யின் சீனியர் வீரர்​களும், இளம் வீரர்​களும் தங்​களது மாநிலங்​களை சேர்ந்த அணி​களுக்​காக களமிறங்க உள்​ளனர். இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு விளை​யாட உள்​ளனர். இது இந்​திய கிரிக்கெட்​டுக்​குள் உரு​வாகி வரும் அதி​கார மையத்​துக்கு அவர்கள், இனி விதி​விலக்​கல்ல என்​ப​தையே தெளிவுப்படுத்துகிறது. இன்​றும் வரும் 26-ம் தேதி​யும் ஜெய்ப்​பூரில் சிக்​கிம் மற்​றும் உத்தராகண்ட் அணி​களுக்கு எதி​ராக நடை​பெறும் ஆட்​டத்​திலும் மும்பை அணிக்​காக ரோஹித் சர்மா களமிறங்​கு​கிறார்.
அதேவேளை​யில் மும்​பை​யில் இந்​திய அணி​யின் முன்​னாள் பேட்டிங் பயிற்​சி​யாளர் சஞ்​சய் பங்​கருடன் இணைந்து விராட் கோலி பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறார்.
டெல்லி அணிக்​காக களமிறங்​கும் அவர், இன்​னும் எந்​தெந்த போட்​டிகளில் விளை​யாட உள்​ளார் என்​பதை தெரிவிக்​க​வில்​லை.
எலைட் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி அணி தனது முதல் ஆட்​டத்​தில் இன்று ஆந்திராவுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்தை பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் நடத்த கர்​நாடக கிரிக்கெட் சங்​கம், அம்​மாநில அரசிடம் அனு​மதி கேட்​டிருந்​தது.
ஆனால், பாது​காப்பு காரணங்​களை கருதி போட்​டிகளை நடத்த அரசு அனு​ம​திக்​க​வில்​லை. இதையடுத்து இந்த போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் அமைந்​துள்ள மைதானத்​தில் நடைபெறுகிறது. இதற்​கிடையே விராட் கோலி நேற்று இரவு பெங்களூரு வந்​தடைந்​தார். இதனால் அவர், இன்​றைய ஆட்டத்தில் களமிறங்​கக்​கூடும் என ஊகங்​கள் எழுந்​துள்​ளன.