விமான நிறுவனம் எது நடவடிக்கை

புதுடெல்லி: டிசம்பர் 9-
இண்​டிகோ நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு கூறி​யுள்​ளார்.
இண்​டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநிலங்​களவை​யில் விமான போக்​கு​வரத்துத் துறை அமைச்​சர் ராம்​ மோகன் நாயுடு கூறிய​தாவது:
விமானிகள் பணிநேரம் குறித்த புதிய விதி​கள் அமலுக்கு வந்​தத​தால், இண்​டிகோ நிறு​வனம் பைலட் பற்​றாக்​குறை பிரச்​சினையை சந்​தித்​தது. இதனால் நூற்​றுக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. ஆயிரக்​கணக்​கான பயணி​கள் தவித்​தனர்.
இந்த விவ​காரத்தை நாங்​கள் எளி​தாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை. நாங்​கள் கடும் நடவடிக்கை எடுத்து மற்ற விமான நிறு​வனங்​களுக்கு முன்​மா​திரியை ஏற்​படுத்​து​வோம். புதிய விதி​முறை​களை பின்​பற்​றாத நிறு​வனங்​கள் மீது கடும் நடவடிக்கை எடுப்​போம்.
இந்த விவ​காரம் குறித்து முழு விசா​ரணை நடத்​தப்​படும். விமான போக்​கு​வரத்து துறை​யில் அதிக நிறு​வனங்​கள் செயல்பட வேண்​டும் என அரசு விரும்​பு​கிறது. 5 பெரிய விமான நிறு​வனங்​களை வைத்​துக் கொள்​ளும் அளவுக்கு நாட்​டின் திறன் உள்​ளது. இவ்​வாறு ராம்​மோகன் நாயுடு கூறி​னார்.