Home மாவட்டங்கள் பெங்களூர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: ஏப்ரல் 21-
சென்​னை​யில் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வாலும் முதல்​வருடன் சென்று வாக்கு சேகரித்​தார்.
தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை​யுடன் முடிவடைகிறது. இதனால், அனைத்​துக் கட்​சி​யினரும் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தமிழகம் முழு​வதும் 6 கட்​டங்​களாக பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். நேற்று முன்​தினம் இரவு சென்னை திரும்​பிய முதல்​வர், சென்​னை​யில் மயி​லாப்​பூர், ஆயிரம்​விளக்​கு, தியாக​ராய நகர் தொகு​தி​களில் திமுக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார்.
நேற்று காலை சென்னை அண்ணா நகர், மதுர​வாயல், விரும்​பாக்​கம் ஆகிய தொகு​தி​களில் திமுக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக வாக்கு சேகரித்​தார். பூங்​காக்​கள், மார்க்​கெட் பகு​தி​களில் நடந்து சென்​று, பொது​மக்​களிடம் ஆதரவு கோரி​னார்.
நேற்று மாலை திருவிக நகர் தொகுதி திமுக வேட்​பாளரை ஆதரித்து புளியந்​தோப்பு காவல் நிலை​யம் அருகே பிரச்​சா​ரத்தை முதல்​வர் ஸ்டா​லின் தொடங்​கி​னார். அவருடன் ஆம் ஆத்மி கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாள​ரும், டெல்லி முன்​னாள் முதல்​வரு​மான அர்​விந்த் கேஜ்ரி​வாலும் இணைந்து பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பிரச்​சா​ரத்​தின்​போது முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: டெல்​லி​யில் 2 முறை முதல்​வ​ராக இருந்த அர்​விந்த் கேஜ்ரி​வால் நமது அழைப்பை ஏற்று பிரச்​சா​ரத்​துக்​காக தமிழகம் வந்​துள்​ளார். அவர் பாஜக​வுக்கு ஜென்ம விரோ​தி​யாக இருப்​பவர். எந்த மிரட்​டலுக்​கும், அச்​சுறுத்​தலுக்​கும் அஞ்​சாதவர். அவர் மீது அபாண்​ட​மான வகை​யில் ஊழல் குற்​றச்​சாட்டை சுமத்​தினர்.
அவரை கைது செய்து சிறை​யில் அடைத்​து, மன்​னிப்பு கேட்க வேண்​டும் என்று அவரை வலி​யுறுத்​தினர். உயிரே போனாலும் மன்​னிப்பு கேட்க மாட்​டேன் என்று போராடிய​வர் கேஜ்ரி​வால். உச்ச நீதி​மன்​றம் வரை சென்று போராடி, தன் மீது போடப்​பட்ட வழக்​கு​கள் அனைத்​தை​யும் பொய் என்று நிரூபித்து விடு​தலை​யாகி வெளியே வந்​துள்​ளார்.
அவர் உங்​களைத் தேடி வந்து திமுக​வுக்கு ஆதரவு கேட்​கிறார். அந்த அளவுக்கு அவருக்​கும், நமக்​கும் தொடர்பு இருக்​கிறது. அது​மட்​டுமின்​றி, தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​களில் உள்ள மாதிரிப் பள்​ளி​களை திறக்க உந்​துதலாக இருந்​தவர் கேஜ்ரி​வால். மீண்​டும் தமிழகத்​தில் நம் ஆட்சி அமைந்​ததும், 1,000 ஸ்மார்ட் பள்​ளி​களைத் திறப்​போம். இவ்​வாறு அவர்​ பேசினார்.
பின்​னர், எழும்​பூர், துறை​முகம், ராயபுரம் பெரம்​பூர், ஆர்​.கே.நகர் தொகு​தி​களில் முதல்​வர் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அவருக்கு திமுக​வினர் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். பெரம்​பூரில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: நான் யாரை​யும் தாக்​கியோ, விமர்​சித்​தோ, தரக்​குறை​வாகவோ பேச விரும்​ப​வில்​லை. அந்த பழக்​க​மும் எனக்கு கிடை​யாது. கடந்த முறை திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​யில் 90 சதவீத பணி​களை முடித்​து​ விட்​டோம். மீதம் 10 சதவீத பணி​கள் உள்​ளன. மத்​திய அரசு போதிய நிதியை விடுவிக்​காதது​தான் அதற்கு காரணம். மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி ஆட்​சிக்கு வந்​து, நாடாளு​மன்​றத்​தில் தோல்​வியை சந்​தித்த முதல் மசோ​தா, தொகுதி மறு​வரையறை மசோ​தா​தான். மத்​திய அரசுக்கு கவுன்ட்​-ட​வுன் தொடங்​கி​விட்​டது.