Home செய்திகள் தேசிய செய்திகள் ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி

ஹுக்ளி நதியில் படகு சவாரி செய்த மோடி

கொல்கத்தா: ஏப்ரல் 25 –
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி.கடந்த 19-ம் தேதி மேற்​கு​வங்​கத்​தின் ஜார்​கி​ராம் பகு​தி​யில் பிரதமர் மோடி பிரச்​சா​ரம் செய்​தார். தலைநகர் கொல்​கத்​தா​வில் கங்​கை​யின் கிளை நதி​யான ஹுக்​ளி​யில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று படகு சவாரி செய்​தார்.படகோட்டி கவுரங்கா பிஸ்​வாஸ், படகினை ஓட்​டி​னார். அவருக்கு பிரதமர் மோடி ரூ.1,000 வழங்​கி​னார். கரை திரும்​பிய பிறகு அவரை ஆரத் தழுவி பாராட்​டி​னார்.
இதுதொடர்​பான புகைப்​படங்​களை அவர் சமூக வலைதளங்களில் வெளி​யிட்டு உள்​ளார். அவர் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்​கு​வங்க மக்​களின் வாழ்க்கையில் கங்கை மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. இந்த புனித நதி மேற்​கு​வங்​கத்​தின் கலாச்​சா​ரத்​தோடு பின்​னிப் பிணைந்​திருக்​கிறது.தலைநகர் கொல்​கத்​தா​வில் ஹுக்ளி நதி​யில் சிறிது நேரம் படகு சவாரி செய்​தேன். இதன்​மூலம் அன்னை கங்​கைக்கு மரி​யாதை செலுத்​தினேன். படகோட்​டி​யின் கடின​மான வாழ்க்கை நடை​முறை​களை கேட்டு அறிந்​தேன். மேற்​கு​வங்​கத்​தின் வளர்ச்​சி, மக்​களின் செழிப்​புக்​காக பாஜக அயராது பாடு​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.பிரதமர் நரேந்​திர மோடி​யின் படகு சவாரி புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கின்​றன.