
பெங்களூரு, ஜூன்.4-
ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்கும் வெற்றி ஊர்வலத்தை காண ரசிகர்கள் கட்டுக்கடங்காத சுனாமி போல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து முண்டியடித்து ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 பேர் பரிதாபமாக பலியானார்கள். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் எதிரே நெஞ்சை உருக்கும் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
ஆர்சிபி அணி மீதான பற்று பாசம் வெறியாக மாறி இத்தனை உயிர்களை பலி கொண்டு உள்ளது
18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்த ஆர்சிபி அணிக்கு கர்நாடக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இன்று மதியம் தனி விமான மூலம் பெங்களூர் விமான நிலையம் வந்த கிரிக்கெட் வீரர்கள் அங்கிருந்து ஒரு பஸ் மூலம் விதான விதான சவுதா வளாகம் வந்தனர். முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஆர் சி பி அணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். அப்போது இந்த காட்சியை காண கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் கூடியது. இந்த நிகழ்வு முடிந்ததும் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வெற்றி ஊர்வலம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து விதான சவுதா வளாக நிகழ்வு முடிவதற்குள் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சின்னசாமி ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்தனர். அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சின்னசாமி ஸ்டேடியத்தின் கதவுகளை உடைத்து உள்ளே செல்ல ரசிகர்கள் முயன்றனர் ஒருவர் மீது ஒருவர் ஏறி இறங்கி வெறியாட்டம் போட்டனர். அப்போது பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான பேர் மயங்கி விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற கூட முடியவில்லை ஆம்புலன்ஸ் அந்த பக்கம் வர முடியவில்லை என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை அந்தப் பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது. ஒரு வழியாக மயக்கம் அடைந்தவர்களை பெங்களூர் மருத்துவமனை மற்றும் வைதேகி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி 10 பேர் வரை பலியாகி இருக்கும் நெஞ்சை பதற செய்யும் பயங்கர தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய வெற்றி கொண்டாட்டம் அழுகுரல் மரண ஓலம் என்று மாறி அந்த இடத்தையே கண்ணீரும் கவலையுமாய் மாற்றியது. பலியானவர்களில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் என்றுதெரியவந்துள்ளது பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள கௌரி மருத்துவமனையில் மற்றும் மூன்று ஆண்கள் 3 பெண்கள் உயிரிழந்து உள்ளனர்