13 மாவட்டங்களில் கனமழை

சென்னை: டிச. 2: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்​சேரி, விழுப்புரம் பகுதி​யில் அதிக​னமழை கொட்டி தீர்த்​தது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. மழை பெய்​துள்ளது. இன்று 13 மாவட்​டங்​களில் கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் பாலசந்​திரன் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: 90 கி.மீ. வேகத்தில் காற்றுதென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்​சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையை கடந்​தது. அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசி​யுள்​ளது. டிசம்பர் 1-ம் தேதி (நேற்று) காலை முதல் புதுச்​சேரி அருகே புயலாக நிலை கொண்​டுள்​ளது.
இதன் காரணமாக புதுச்​சேரியை சுற்றி​யுள்ள பகுதி​களில் அதிக​னமழை பெய்​துள்ளது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. புதுச்​சேரி​யின் பத்துக்​கண்​ணு​வில் 45 செ.மீ. திருக்​க​னூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்​டிவனத்​தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்​சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்​தில் 32 செ.மீ. செம்​மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்பு​ரத்​தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.
புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவுகிறது.இதன் காரண​மாக, இன்று (டிச.2) நீலகிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், ஈரோடு மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்​கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்யவாய்ப்பு உள்ளது.
நாளை (டிச.3) மேற்​கண்ட மாவட்​டங்​களி​லும் (திருச்சி, மதுரை நீங்​கலாக), திருப்​பத்​தூர் மாவட்​டத்​தி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதி​களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதி​கள், மன்னார் வளைகுடா, குமரிக்​கடல் பகுதி​களில் இன்றும், நாளை​யும் 55 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​கூடும். எனவே, இப்பகு​தி​களுக்கு மீனவர்கள் செல்ல வேண்​டாம். இவ்வாறு அவர் கூறினார்.