ஸ்ரீஹரிகோட்டா: ஜன. 16:
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த பணிகள் வெற்றிகமராக முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளைப் படித்து வருகிறது. இதனால் உலகின் பல வளர்ந்த நாடுகள் கூட தங்கள் விண்கலனைகளை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோவிடம்.
அடுத்தகட்டமாக இஸ்ரோ இப்போது ஸ்பேடெக்ஸ் (SPADEX-Space Docking Experiment) திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விண்வெளியில் இரு செயற்கைகொள்களை இணைக்கும் முயற்சியை இஸ்ரோ கையில் எடுத்தது.
ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த நிலையில், அவை கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. கடந்த வாரமே இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தாமதம் ஆனது. இதற்கிடையே விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 220 கிலோ எடை கொண்ட 2 செயற்கைக்கோள்கள் இணைக்கும் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு இந்தியாவாகும்.
220 கிலோ எடை கொண்ட இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. குறிப்பாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்த டாக்கிங் முறை முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்பட்டது. தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் டாக்கிங் செயல் முறையை வெற்றிகரமாக இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.
ககன்யான் திட்டம் மட்டுமல்லாது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சந்திரயான்-4 ஆகிய திட்டத்திற்கும் இந்த டாக்கிங் பரிசோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டாக்கிங் முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக வரலாற்றில் சாதனை படைத்ததுள்ளது இந்தியாவின் இஸ்ரோ.