5 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு சீனா நேரடி விமான சேவை

புதுடெல்லி, அக். 20- வரும் நவம்​பர் 9-ம் தேதி முதல் இந்​தி​யா​வுக்கு நேரடி விமான சேவை மீண்​டும் இயக்​கப்​படும் என சீன நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரண​மாக சர்​வ​தேச விமான சேவை முற்​றி​லும் நிறுத்​தப்​பட்​டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா மற்​றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்​பட்​டது. இதனால்,
கரோ​னா​வுக்கு பிறகும் சீனா​வுக்கு நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக பக்​கத்து நாடு​கள் மூல​மாகவே சீனா​வுக்கு செல்ல வேண்​டிய நிலை உள்​ளது. இந்த சூழ்​நிலை​யில் இரு நாடு​களுக்​கிடையி​லான உறவில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, வரும் அக்​டோபர் 26-ம் தேதி முதல் சீனா​வுக்கு நேரடி விமான சேவை இயக்​கப்​படும் என மத்​திய விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகம் கடந்த 2-ம் தேதி அறி​வித்​தது. இதன்​படி, இந்​தி​யா​வின் இண்​டிகோ நிறு​வனம்
5 ஆண்​டுகளுக்​குப் பிறகு முதல் முறை​யாக கொல்​கத்​தா- கு​வாங்சு (சீ​னா) இடையே 26-ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்க உள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. இது​போல, டெல்​லி-கு​வாங்சு இடையே நவம்​பர் 10-ம் தேதி முதல் விமான சேவை தொடங்​கும் என அறி​வித்​துள்​ளது. இது​போல, இந்த ஆண்டு இறு​திக்​குள் சீனா​வுக்கு நேரடி விமான சேவை இயக்​கப்​படும் என ஏர் இந்​தியா நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இந்த சூழலில், ஷாங்​காய்​-டெல்லி இடையே நவ.9-ம் தேதி விமான சேவை (வாரத்​துக்கு 3 நாள்) தொடங்​கப்​படும் என சீனாவைச் சேர்ந்த ஈஸ்​டர்ன் ஏர்​லைன்ஸ் நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.