புதுடில்லி: நவ. 13-
டாடா நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி மையங்களை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தீவிர படுத்தியுள்ளது. அந்த வகையில் டாடா குழும தலைவர்களை சந்தித்து ஆந்திராவில் தொழில்களை தொடங்க வருமாறு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன் அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.
மாநில தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் எந்தெந்த துறைகளில் எல்லாம் அரசும் டாடா நிறுவனமும் இணைந்து செயல்படலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் சந்திரபாபு நாயுடு, டாடா நிறுவன தலைவர் திரு என் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தேன் அமராவதியில் இந்த சந்திப்பு நடைபெற்றது என கூறியுள்ளார். ரத்தன் டாடா குறித்தும் அவருடைய நினைவுகள் குறித்தும் நாங்கள் பேசினோம்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் ரத்தன் டாடாவின் பங்கு குறிப்பாக தொழில்துறையில் அவர் எந்த அளவிற்கு முக்கிய பங்காற்றினார் என்பதையும் அப்போது நாங்கள் பேசினோம் என்றார்.
Home செய்திகள் தேசிய செய்திகள் ஆந்திராவில் பணத்தை கொட்டும் டாடா குழுமம்.. ஒரே நேரத்தில் 20 மெகா திட்டம்