இளம் வீரர்களுக்கு புஜாரா அட்வைஸ்

மும்பை, மே 27- புஜாரா, இந்திய அணியில் இருந்தபோது மிகவும் சிறந்த வீரராக இருந்தவர், ஆசிய மைதானங்கள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நாடுகளிலும் ரன்கள் குவித்தவர். இந்த நிலையில் புஜாரா, சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை வீரர்கள் அணுகும் மாற்றம் குறித்து பேசியுள்ளார். உதாரணமாக, இங்கிலாந்து அணி ‘பாஸ்பால்’ எனும் ஸ்டைலை பின்பற்றுகிறது. இது பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் வேகமாக ரன்களை அடிக்கும் அணுகுமுறையை கொண்டது. ஆனால் இது இங்கிலாந்துக்கு சாதகத்தை கொடுத்தாலும், பெருமளவு பாதகத்தை தான் தந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள புஜாரா, பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சு மைதானத்தின் நிலை மற்றும் ஒட்டுமொத்த சூழ்நிலைகளைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெறுமனே பந்தை அடிப்பதற்கு மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றும் கூறினார். டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் மிக நீண்ட வடிவம், இதில் ‘பொறுமை’ மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.