
பெங்களூர், ஜூன்.4-
பெங்களூரில் இன்று மாலை நடந்த துயர சம்பவத்தில் 10 ஆர்சிபி ரசிகர்கள் பலியானார்கள். பலர் கவலைக்கிடமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கர்நாடக மாநில பிஜேபி தலைவர் விஜயேந்திரா வந்தார். பலியான ரசிகர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வரும் ரசிகர்களை பார்வையிட்டார் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக் கண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. இன்று நடந்த இந்த துயர சம்பவத்திற்கு முழுக்க முழுக்க கர்நாடகா அரசே காரணம் உயிர் பலிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் காரணம். அவசர அவசரமாக போதிய அவகாசம் இல்லாத பட்சத்தில் எதற்காக இந்த பாராட்டு விழா மற்றும் வெற்றி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என்பது அரசாங்கத்திற்கு தெரியாதா. இது முழுக்க முழுக்க கர்நாடக அரசின் நிர்வாக தோல்விதான் இதற்குக் காரணம். பலியான அப்பாவி ரசிகர்களின் குடும்பத்தினர் கண்ணீர் இந்த அரசை சும்மா விடாது. என்று கர்நாடக மாநில பிஜேபி தலைவர் விஜேந்திரா ஆவேசமாக கூறினார்