
மாஸ்கோ: ஜூன் 5-
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் நேற்று போன் மூலம் அவசரமாக உரையாடினர். , ரஷ்ய போர் விமானங்களுக்கு எதிரான உக்ரைனின் டிரோன் தாக்குதல் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் பேசியுள்ளனர்.டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியா தளத்தில், இந்த அழைப்பு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தலைவர்களும் ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல், இரு தரப்பினரும் நடத்திய பல்வேறு தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தனர்.
ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.