தருமபுரி விபத்தில் கேரள நடிகர் படுகாயம் – தந்தை பலி

தர்மபுரி: ஜூன் 6-
கேரளாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சாக்கோ தனது குடும்பத்தினர்களுடன் காரில் பெங்களூருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தருமபுரி-ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் நடிகர் சாக்கோவின் தந்தை சிபி சகோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடிகர் சாக்கோ, தாய், சகோதரர் மூவரும் காயம் அடைந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த நடிகரின் மேலாளருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு காவல் துறையினர் நடிகரின் தந்தை உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நடிகர் சாக்கோ மற்றும் குடும்பத்தினர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.