புதிய கோணத்தை கையில் எடுத்த அதிகாரிகள்

அகமதாபாத்: ஜூன் 20- அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் பழைய விமான விபத்து ஒன்றுடன் அதை ஒப்பிட்டு விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2020 பிப்ரவரியில் கேட்விக்கிலிருந்து ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று புறப்பட்ட உடனேயே இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது. இரண்டையும் ஒப்பிட்டு விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எஞ்சின் கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் மீண்டும் கேட்விக் விமான நிலையத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு நடந்த அந்த விபத்து குறித்து இங்கிலாந்தின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AIIB) நடத்திய விசாரணையில்,
எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட மாசு காரணமாகவே என்ஜின்கள் செயலிழந்தன என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், விமானத்தை இயக்குவதற்கு முன்பு பொறியாளர்கள் எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அகமதாபாத் விபத்து குறித்து விசாரிப்பதற்காக வந்துள்ள குழுவும் இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது. விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில் AI-171 விமானத்தின் தொழில்நுட்ப பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மின்சக்தி செயலிழப்பு ஏற்பட்டது விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிடைக்கக்கூடிய ஆதாரங்கள், அகமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் (ATC) அதிகாரிகள் அளித்த வாக்குமூலம், விமானத்தை தரையில் இருந்து இயக்கிய பொறியாளர்கள் அளித்த தகவல் மற்றும் விபத்துக்குள்ளான விமான பாகங்களை ஆய்வு செய்ததில் இருந்து.. விமானம் புறப்பட்ட சில நொடிகளில் முக்கிய மின் அமைப்பில் பழுது ஏற்பட்டது தெரியவந்துள்ளது.s