‘போதைப் பொருள்’ பிரசாத் யார்?

சென்னை: ஜூன் 25-
போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் தனது வாக்குமூலத்தில் அதிமுக தொழிநுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் குறித்தும் விவரித்துள்ளார்.
“என்னை வைத்து அதி​முக முன்​னாள் நிர்​வாகி பிர​சாத் ‘தீங்​கிரை’ என்ற படத்தை இயக்​கி​னார். ஒப்​பந்​தப்​படி முழு பணத்​தை​யும் அவர் தரவில்​லை. நாங்​கள் சந்​தித்​த​போதெல்​லாம் அவர் என்னை மது​பானக் கூடத்​துக்கு அழைத்​துச் செல்​வார். பின்​னர் போதைப் பொருள் கொடுத்​தார். கடன் உட்பட குடும்ப பிரச்​சினை​யால் போதைப் பொருளை அடிக்​கடி பயன்​படுத்த தொடங்கினேன்.
அதன் பிறகு ஆப்​பிரிக்க போதைப் பொருள் கடத்​தல் மன்​னன் ஜான், சேலம் சங்​ககிரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் உள்​ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்​கடி நானே நேரடி​யாக​வும், பிற நபர்​கள் மூல​மாக​வும் போதை வஸ்​துவை வாங்​கினேன். நான் மட்​டும் அல்​லாமல் திரைத்​துறை​யில் 10-க்​கும் மேற்​பட்ட முன்​னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்​படுத்தி வரு​கின்​றனர். நான் தவறு செய்​து​விட்​டேன்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
யார் இந்த பிரசாத்? – போதைப் பொருள் வழக்கில் அதிமுக தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் (33), கடந்த மாதம் 29-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பிரசாத், தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பிறகே அதிமுகவில் சேர்ந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜானிடம் போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார். இது தொடர்புடைய பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.