
வாஷிங்டன்: ஜூன் 27-
ரஷ்யாவும், அமெரிக்காவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் ரஷ்யாவை முடக்க அமெரிக்காவில் புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. அது ‛ரஷ்யா தடை மசோதா 2025’ என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ரஷ்யா மட்டுமின்றி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். இதன்மூலம் ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவின் சாராம்சம் என்ன? இந்தியா எப்படி பாதிக்கும்? என்பது பற்றி பார்க்கலாம். கிராம நத்தம் பட்டா மாற்றம்.. புறம்போக்கு நிலத்தில் இது மேஜர்! வீட்டுமனைக்கு 2 பேர் விண்ணப்பித்தால்? கனவு நிறைவேறியது.. மகிழ்ச்சியுடன் அறிவித்த வரலட்சுமி.. இதனால் தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்க்கு வரலையா? விருச்சிகத்துக்கு குரு சனியால் கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் கரன்ஸி, தங்கம்.. என்ஜாய் பண்ணுங்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வல்லரசுகளாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் அவ்வப்போது நட்பு பாராட்டி கொண்டாலும் கூட அவர்களுக்கு இடையே போட்டி தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் 3 நாடுகளும் மாறி மாறி காலை வாரி விடுவதை வழக்கமாக வைத்துள்ளன.
இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவர் நேரடியாக சீனாவுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். சீனாவுக்கு அதிகப்படியான வரிகளை விதித்து அதிரடி காட்டினார்.
அதேவேளையில் சீனாவும் அசரவில்லை. அமெரிக்காவுக்கு வரியை தீட்டியது. மறுபுறம் ரஷ்யா – அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் மோசமாக இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தான் இதற்கு காரணம்.