வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு; பலரை காணவில்லை

புதுடெல்லி: ஜூன் 27 –
இ​மாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வடமாநிலங்​களில் மழை பாதிப்​பு, விபத்து காரண​மாக 10 பேர் உயி​ரிழந்​தனர். பலரை காண​வில்​லை. இமாச்சல பிரதேசத்​தில் மணாலி, ஜீவா நல்​லா, ஷிலாகர், ஸ்ட்​ரோ, ஹோரன்​கர் உள்​ளிட்ட பகு​தி​களில் நேற்று மேகவெடிப்பு ஏற்​பட்​டது. இந்த பகு​தி​களின் நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது.
இமாச்​சலின் தரம்​சாலா பகு​தி, கன்​னி​யாரா கிராமத்​தில் நீர்​மின் நிலைய கட்​டு​மான பணி​கள் நடை​பெறுகின்​றன. இங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்த சுமார் 20 தொழிலா​ளர்​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் 4 பேரின் சடலங்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன. மீத​முள்ள 16 பேரை தேடும் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது.
இமாச்சல பிரதேசத்​தின் பல்​வேறு சுற்​றுலா தலங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. அந்த பகு​தி​களில் சிக்​கித் தவிக்​கும் சுமார் 2,000-க்​கும் மேற்​பட்ட சுற்​றுலா பயணி​களை பத்​திர​மாக மீட்க முயற்சி மேற்​கொள்​ளப்​படு​கிறது. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில நாட்​களாக பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால் மலைப் பகுதி சாலைகள் மிகக் கடுமை​யாக சேதமடைந்து உள்​ளன.
இந்த சூழலில் உத்​த​ராகண்​டின் பத்​ரி​நாத் கோயிலுக்கு 20 பக்​தர்​கள் பேருந்​தில் சென்று கொண்​டிருந்​தனர். கோல்​திர் பகு​தி​யில் பேருந்து சென்​ற​போது பின்​னால் வந்த லாரி மோதி​யது. இதில் அலக்​நந்தா ஆற்​றில் பேருந்து கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 8 பேர் படு​கா​யங்​களு​டன் மீட்​கப்​பட்​டனர். 9 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.
மழை வெள்​ளத்​தால் உத்​த​ராகண்​டின் கேதார்​நாத் பகு​தி​யில் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்டு சுமார் 1,300 சுற்​றுலா பயணி​கள் ஆங்​காங்கே சிக்கி உள்​ளனர். அவர்​களை பத்​திர​மாக மீட்க தேசிய பேரிடர் மீட்​புப் படை தீவிர முயற்சி செய்து வரு​கிறது. ஜம்மு காஷ்மீரில் ரஜோரி, பூஞ்ச், தோடா பகு​தி​களில் நேற்று மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இந்தப் பகு​தி​களில் காட்​டாற்று வெள்​ளத்​தில் 7 பேர் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் ரஜோரியை சேர்ந்த 3 பேர் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர்.
4 பேர் உயிருடன் மீட்​கப்​பட்​டனர். நிலச்​சரிவு காரண​மாக ஜம்​மு​வில் வைஷ்ணவி தேவி கோயில் மூடப்​பட்டு உள்​ளது. குஜ​ராத், மகா​ராஷ்டி​ரா, ராஜஸ்​தான், உத்தர பிரதேசம், ஒடிசா உள்​ளிட்ட மாநிலங்​களி​லும் கனமழை பெய்து வரு​கிறது. கனமழை காரண​மாக மும்​பை- அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் நேற்று போக்​கு​வரத்து ஸ்தம்​பித்​தது. இரு​புற​மும் பல கி.மீ. தொலை​வுக்கு வாக​னங்​கள் அணிவகுத்து நின்​றன. குஜ​ராத்​தில் அகம​தா​பாத், சூரத் நகரங்​கள்​ வெள்​ளத்​தில்​ மூழ்​கி உள்​ளன.