கர்நாடக பக்தர்கள்3 பேர் சாவு 9 பேர் படுகாயம்

பெங்களூர்: ஜூன் 30-
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த டெம்போ மீது கனரக வாகனம் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி அருகே இந்த கோர விபத்து நடந்தது. இறந்தவர்கள் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளி தாலுகாவை சேர்ந்த மேகேஷ் (17), சரண் (17), ஸ்ரவாணி (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த 9 பக்தர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இவர்கள் பாகேபள்ளியில் இருந்து திருப்பதிக்கு ஒரு டெம்போ டிராவலரில் சென்று சாமி தரிசனம் செய்தனர். பிறகு ஊர் திருவிழா அப்போது வழியில்
மதனப்பள்ளி தாலுகா குருபலகோட்டா மண்டலத்தில் உள்ள சென்னமாரிமிட்டா அருகே பாகேபள்ளி-திருப்பதி சாலையில் வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று இவர்களின் வாகனம் மீது மோதியது.
மோதிய வேகத்தில் டெம்போ டிராவலர் கவிழ்ந்தது, இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். மதனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.