வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம் நிறுத்தம்

புதுடெல்லி, ஆகஸ்ட் 11- ​நாடு முழு​வதும் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, பெங்​களூரு உட்பட பல நகரங்​களில் 40-க்​கும் மேற்​பட்ட தமிழ்ச்​சங்கங்​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் தமிழ் குடும்​பத்தின் குழந்​தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்​றனர்.சில மாநிலங்களில் தனி​யாக நிர்​வாகிக்​கப்​படும் தமிழ்​வழிக் கல்விக்​கான பள்​ளி​களும் 12 -ம் வகுப்பு வரை நடை​பெறுகின்​றன. இவற்​றுக்கு 1 முதல் 12 வகுப்​பு​கள் வரை தேவைப்​படும் தமிழ்​நாட்டு அரசு பாட நூல்​கள் இலவச​மாகக் கிடைத்து வந்​தன. இதன் விநி​யோகத்தை நடப்​பாண்டு முதல் தமிழ்​நாடு அரசு ரத்து செய்​துள்​ளது. இதற்கு தமிழ்​நாடு அரசின் பணநெருக்​கடி காரண​மாகக் கூறப்​படு​கிறது. இது குறித்து இந்து தமிழ் திசை நாளேட்​டிற்கு கிடைத்த தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வியல் கழகத்​தின் உறுப்​பினர் செயலரும், உதவி இயக்​குநரு​மான ஞ. சா​முண்​டீஸ்​வரி​யின் ஜுலை 27 தேதி​யிட்ட கடிதத்​தின்​படி, ‘‘2025-26 கல்​வி​யாண்​டிற்​கான தமிழ் பாடநூல்களுக்​கானத் தொகை​யினை மேற்​கொள்ள இயலாது என்​றும் மேற்​படி நூல்​களை இலவச​மாக அளிக்​கும்​படி கோரப்பட்டுள்​ளது. 1 முதல் 12 -ம் வகுப்பு வரையி​லான தமிழ் பாடநூல்​கள் ஒவ்​வொரு வகுப்​பிற்​கும் 10 பிர​தி​கள் இலவச​மாக​வும், மீதி​யுள்ள பிரதிகளுக்கானத் தொகை செலுத்தி பெற்​றுக்​கொள்​ளலாம்’ எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சுமார் நாற்​பது வருடங்களுக்கும் மேலாக இந்த பாடநூல்​கள் அனைத்​தும் தமிழ்​நாடு அரசால் இலவச​மாகவே அளிக்​கப்​பட்டு வந்​தது. இதன் மதிப்பு கோடி ரூபாயை தாண்​டும். உதா​ரண​மாக தில்லி தமிழ் சங்​கத்​திற்கு மட்​டும் ரூ.20 லட்​சம் மதிப்​பிலான பாட நூல்​கள் வருடந்​தோறும் இலவச​மாக விநி​யோகிக்கப்​பட்​டன. இந்த திடீர் நிறுத்​தத்​தால் தமிழ் சங்​கங்​களின் தமிழ் பள்​ளி​களுக்கு தமிழ் பாடநூல்​கள் கிடைப்​ப​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது. ஏனெனில், ஏற்​கெனவே நிதிச்​சுமை​யால் பெரும்​பாலான தமிழ் சங்​கங்​கள் பாதிப்​படைந்து வரு​வ​தாகத் தெரி​கிறது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் வெளி​மாநில நகரங்​களின் தமிழ் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வட்​டாரம் கூறும்​போது, ‘மாநில அரசுகளிட​மிருந்​தும், மத்​திய அரசிட​மிருந்​தும் எங்​களுக்கு எந்த நிதி உதவி​யும் கிடைப்​ப​தில்​லை. தமிழ்​நாடு அரசின் முடி​வால் வெளி​மாநிலங்​களில் தமிழ் மொழியை வளர்த்​தெடுப்​ப​தில் தொய்வு ஏற்​படும் அபாய​மும் உள்​ளது.’ எனத் தெரி​வித்​தனர். பல்​வேறு நகரங்​களின் தமிழ் சங்​கங்​கள் நடத்​தும் பள்​ளி​களில் தமிழ் ஒரு கட்​டாயப் பாட​மாக போதிக்​கப்​படு​கிறது. இதற்​காக, தமிழ்​நாடு அரசின் இலவச நூல்​களால் அப்​பள்​ளி​களில் படிக்​கும் ஏழை குழந்​தைகள் பலனடைந்து வந்​தன.