நியூயார்க், செப். 24- ‘’இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்,’’ என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். உக்ரைன் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அமைச்சர்கள் கூட்டத்தில் மார்கோ ரூபியோ பேசியதாவது: அதிபர் டிரம்ப் உலக அமைதியை மீட்டெடுக்க முக்கிய கவனம் செலுத்தினார். இதுவே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. பல இடங்களில் அது பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார். தாய்லாந்து மற்றும் கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல மோதல்களைத் தீர்ப்பதில் டிரம்ப் முக்கியமான பங்கை வகித்து இருக்கிறார். உக்ரைனில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய சவால் நீடிக்கிறது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு அதிபர் டிரம்ப் அயராது உழைத்துள்ளார்.
இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்.


















