இந்தியா – சீனா விமான சேவை

புதுடெல்லி: அக். 3-
இந்​தியா – சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை அக்​டோபர் 26-ம் தேதி முதல் தொடங்​கப்​படு​கிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காலத்​தில் இந்​தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்​யப்​பட்​டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா – சீனா ராணுவ வீரர்​கள் இடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் இந்​திய தரப்​பில் 20 வீரர்​கள், சீன தரப்​பில் 45 பேர் உயி​ரிழந்​தனர்.இதன்​காரண​மாக, இரு நாடு​கள் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்​பட்​டது.
கரோனா பெருந்​தொற்​றுக்கு பிறகு உலகம் முழு​வதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்​பியது. ஆனால், இந்​தியா – சீனா இடையே மீண்​டும் நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. சர்​வ​தேச அரங்​கில் இரு நாடு​களும் எதிரும் புதிரு​மாக செயல்​பட்டு வந்​தன. கடந்த மே மாதம் இந்​தியா – பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது.
அப்​போது​கூட பாகிஸ்​தானுக்கு ராணுவரீ​தி​யாக சீனா பல்​வேறு உதவி​களை செய்​தது.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு: இந்த நிலை​யில், அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்கை சர்​வ​தேச அளவில் பல மாற்​றங்​களை ஏற்​படுத்​தி​யது. ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாக குற்​றம்​சாட்டி இந்​திய இறக்​குமதி பொருட்​களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்​தார். அமெரிக்​கா​வின் புதிய வரி விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்​தது.
இந்த சூழலில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்​பிங் சமீபத்​தில் ரகசிய கடிதம் ஒன்றை அனுப்​பி​யிருந்​தார். அதில், ‘சர்​வ​தேச விவ​காரங்​களில் இந்​தி​யா​வும், சீனா​வும் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும். எல்​லை​யில் அமை​தியை ஏற்​படுத்த வேண்​டும். அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு போரை தடுத்து நிறுத்த வேண்​டும்’ என்று அழைப்பு விடுத்​திருந்​தார். மேலும், ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் சிறப்பு அழைப்பு விடுத்​தார். இதை ஏற்​றுக்​கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் இறு​தி​யில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய மோடி, “இந்​தி​யா​வும் சீனா​வும் கூட்​டாளி​கள்தான், எதிரி​கள் அல்ல” என்று கூறினார்.
இதே கருத்தை சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் வழிமொழிந்​தார்.உச்சி மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக பிரதமர் மோடி​யும், அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது மீண்​டும் நேரடி விமான சேவையை தொடங்​க​ முடிவு செய்​யப்​பட்​டது. அதன்​படி, மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்தா – சீனா​வின் குவாங்சூ நகரங்​களுக்கு இடையே நேரடி விமான சேவை அக்​. 26-ம் தேதி தொடங்க உள்​ளது.