மனம் திறந்த துணை கேப்டன் ரவீந்திர ஜடேஜா

டெல்லி: அக். 12:
இந்திய டெஸ்ட் அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்குக் கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்தார். இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், விராட் கோலிக்கு அடுத்த மூத்த வீரராக இருந்த ரவீந்திர ஜடேஜா இதுவரை டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டதில்லை. ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றபோது, இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் தீவிரமாக எழுந்தது. அப்போது, முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜாவை
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கேப்டனாக நியமிக்கலாம் என்று தனது கருத்தை முன்வைத்தார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் காயமடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தத் தொடருக்கு ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.