தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்த6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்: நவ. 13-
தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.
இந்த வழக்கை விசா​ரித்து வரும் சிபிஐ அதி​காரி​கள், இது தொடர்​பாக 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு சம்​மன் அனுப்​பி, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அதன்​படி, வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​துள்ள வியா​பாரி​கள், பல்​வேறு துறை அதி​காரி​கள், பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார், ஆம்​புலன்ஸ் உரிமை​யாளர்​கள், ஓட்​டுநர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டனர்.
இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் முதல் நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள் விசா​ரணைக்கு ஆஜராகி வரு​கின்​றனர். நேற்று முன்​தினம் 3 பேர் ஆஜரான நிலை​யில், நேற்று தாந்​தோணிமலை சரவணகு​மார் உள்​ளிட்ட 6 பேர் விசா​ரணைக்கு ஆஜராகினர். அவர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள், கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக பல்​வேறு விவரங்​களைக்​ கேட்​டறிந்​தனர்​.