திருவனந்தபுரத்தில் வாங்கிய டிக்கெட்… தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி?

திருவனந்தபுரம்: நவம்பர் 20-கேரள தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் டிக்கெட் வாங்கியவருக்கு விழுந்துள்ளது. திருவனந்தபுரத்துக்கு குமரியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சென்று வருவதால் பரிசு தமிழர் யாருக்கும் அடித்துள்ளதா என கேரள சேட்டன்கள் விசாரித்து வருகிறார்கள். இதேபோல் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமும் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கே விழுந்துள்ளது. கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்றும் ரூ.50 விலை கொண்ட கேரள தனலட்சுமி DL-27 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி DD 212503 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி இந்த டிக்கெட் திருவனந்தபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ஆகும். திருவனந்தபுரத்திற்கு அடிக்கடி தமிழகத்தை சேர்ந்தவர்கள் கல்வி, வியாபாரம், தொழில் காரணமாக சென்று வருகிறார்கள். அப்படி வருபவர்கள் நமக்கும் என்றாவது அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற எண்ணத்தில் லாட்டரி வாங்கி செல்கிறார்கள்.
இதேபோல் தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் திருவனந்தபுரம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் லாட்டரி சீட்டுகள் வாங்குவதை பார்க்க முடிகின்றது.
இதனால் தமிழகத்தை சேர்ந்த யாருக்கும் இந்த முதல் பரிசு ரூ.1 கோடி அடித்துள்ளதா என கேரள சேட்டன்கள் விசாரித்து வருகிறார்கள். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் பட்டாம்பியில் விற்கப்பட்ட DG 865593 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமும் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு ரூ.5000 முதல் பரிசு அடித்த அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்.
லாட்டரியில் பரிசு அடித்தவர்கள், முடிவினை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். லாட்டரி போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. வாசகர்கள் தங்கள் தலைவிதியை லாட்டரிதான் மாற்றும் என ஒருபோதும் நம்பியிருக்கக்கூடாது. லாட்டரி தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.