ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு

வர்ஜீனியா: நவம்பர் 20-
வங்​கதேசத்​தில் கலவரங்​களை ஏற்​படுத்த ஜோ பைடன் தலை​மையி​லான முந்​தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சஜீப் வசீத் குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதி​ராக நிகழ்ந்த கலவரங்​களை தொடர்ந்து அந்​நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். கலவரத்தை ஒடுக்​கிய​போது ஏற்​பட்ட வன்​முறை மற்​றும் உயிரிழப்பு குற்​றங்​களுக்​காக அவருக்கு அந்​நாட்டு நீதி​மன்​றம் அண்​மை​யில் மரண தண்​டனை விதித்​தது. பொருளா​தார நிபுணர் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசின் ஆட்​சி​யில் இத்​தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. ஷேக் ஹசீ​னாவை தங்களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என இந்​தி​யா​விடம் யூனுஸ் அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது.
இந்​நிலை​யில் அமெரிக்​கா​வில் வசித்து வரும் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சஜீப் வசீத் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படுத்த ஜோ பைடன் தலை​மையி​லான முந்​தைய அமெரிக்க அரசு மில்​லியன் ​கணக்​கில் டாலர்​களை செல​விட்​டுள்​ளது.இதை இப்​போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்​ கொண்​டுள்​ளார்.
ஆனால் ட்ரம்ப் ஆட்​சி​யில் வங்​கதேசம் தொடர்​பான அமெரிக்க அரசின் அணுகு​முறை மாறி​விட்​டது. வங்​கதேசத்​தில் தீவிர​வாத அச்​சுறுத்​தல் மற்​றும் இஸ்​லாமிய அடிப்​படை​வாதத்​தின் எழுச்சி குறித்து அதிபர் ட்ரம்ப் மிகுந்த அக்​கறை கொண்​டுள்​ளார். கடந்த ஆண்டு வங்​கதேசத்​தில் எதிர்க்​கட்​சிகளால் புறக்​கணிக்​கப்​பட்ட பொதுத் தேர்​தலுக்கு பிறகு, ஜோ பைடன் அரசு எதிர்​மறை​யான கருத்​துகளை தெரி​வித்​தது.