‘1947’ ஒரு ரூபாய் நாணயம் வைத்த பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரல்

புதுடெல்லி:நவம்பர் 20- பழைய (1947) ஒரு ரூபாய் நாண​யம் முகப்​பில் பொறிக்​கப்​பட்ட கைக்​கடி​காரத்தை பிரதமர் நரேந்​திர மோடி அணிந்​துள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது.
வெற்​றிகர​மான அரசி​யல்​வாதி என்​பதை தாண்டி அற்​புத​மான ஃபேஷன் உணர்​வுக்கு சொந்​தக்​காரர் பிரதமர் மோடி. இதற்கு ஒவ்​வொரு ஆண்டு சுதந்​திர தினத்​தின்​போதும் டெல்லி செங்​கோட்​டை​யில் கொடியேற்​றும்​போது பிரதமர் மோடி அணி​யும் தலைப்​பாகையே சாட்​சி.
அந்த வகை​யில் தற்​போது பிரதமர் மோடி தனது கைகளில் அணிந்​திருக்​கும் கடி​காரம் சமூக வலை​தளங்​களில் பேசுபொருளாகி​யுள்​ளது. அந்த கடி​காரத்​தின் முகப்​பில் மிக​வும் அரிய பழைமை​யான (1947) ஒரு ரூபாய் நாண​யம் பொறிக்கப்பட்டுள்​ளது. மேலும், அந்த நாண​யத்​தின் நடுவே இந்தியா​வின் சுதந்​திர பயணத்தை குறிக்​கும் மற்​றும் நாட்​டின் ‘மேக் இன் இந்​தி​யா’ திட்​டத்தை பிர​திபலிக்​கும் வகையி​லான புலியின் உரு​வம் இடம்​பெற்​றுள்​ளது.
சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்​ கடி​காரத்தை ஜெய்​பூரைச் சேர்ந்த நிறு​வனம் தயாரித்​துள்​ளது. இது, 43 மி.மீ அளவுள்ள துருப்பிடிக்காத எஃகி​னால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.
இந்த ஒரு ரூபாய் நாண​யம் பிரிட்​டிஷ் ஆட்​சி​யின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாண​யம் என்​ப​தால் அது முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக உள்​ளது. 1946 (இரண்​டாம் பாதி) மற்​றும் 1947-க்கு இடை​யில் மட்​டுமே இந்த ஒரு ரூபாய் நாண​யம் அச்​சிடப்​பட்​டது.

இது குறித்து வாட்ச் கம்​பெனி​யின் நிறு​வனர் கவுரவ் மேத்தா கூறுகை​யில், “சுதேசி உணர்வு எழுச்சி பெற்று வரும் இந்த நேரத்​தில் பிரதமர் மோடி எங்​கள் நிறு​வனத்​தின் கைக்​ கடி​காரத்தை அணிந்​துள்​ளது அளவில்லா மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது” என்றார்​.