
சேலம்: நவம்பர் 25-
கள்ளக்காதல் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்பங்கள் பிரிந்து, இறுதியில் நடுத்தெருவுக்கு நிற்கும் நிலைமை பெருகிவிடுகிறது. சேலத்தில் இளம்பெண் எடுத்த முடிவு, இரு குடும்பத்தினரையுமே நிலைகுலைய வைத்துவிட்டது. என்ன நடந்தது ஓமலூர் ஸ்டேஷனில்? சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் வந்துள்ளனர்.. தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரு குடும்பத்தினாராலும் தங்களுக்கு ஆபத்து உள்ளதாகவும், எனவே பாதுகாப்பு தருமாறும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர். போலீசார் விசாரணை இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அந்த பெண்ணின் பெயர் பிரிய, காதலர் பெயர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தபோதே, அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பிலும், அந்த இளைஞர் தரப்பிலும் திரண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள்.. அதில் ஒருவர் போலீசாரிடம், நான்தான் அந்த பெண்ணின் தாலி கட்டிய கணவர் என்று கூறினார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், இந்த சம்பவத்தின் உண்மை வெளியே வந்தது. பிரியா – ராமு காதல் திருமணம் அதாவது, 4 வருடங்களுக்கு முன்பு ராமு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியா.. இப்போது ராமுவுக்கு 30 வயதாகிறது.. ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியை சேர்ந்தவர்தான் இவரது.. சின்ன திருப்பதியில் துணிக்கடை வைத்திருக்கிறார்.. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.தன்னுடைய கணவர் துணிக்கடை வைத்திருந்தும்கூட, மற்றொரு துணிக்கடையில் வேலைக்கு சென்றுள்ளர் இளம்பெண்.. அபபோது சிமெண்டு விற்பனை கடையில் வேலை பார்க்கும் 25 வயது நபர் ஹரிஷ்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
ஊட்டியில் தாலி கட்டினார் ஒருகட்டத்தில் கள்ளக்காதலர் ஹரிஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிரியா, கடந்த வாரம் விட்டு வெளியேறியிருக்கிறார். கள்ளக்காதலனை ஊட்டிக்கு அழைத்து சென்று, கோவிலில் தாலியும் கட்டிக் கொண்டுள்ளார். பிறகு, கணவர் தங்களை பிரித்துவிடுவாரோ என்று பயந்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணவருடன் சென்று குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தினர்கள்.. ஆனால், பிரியா, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.. கணவரை விவாகரத்து செய்யாமல், இப்படி திருமணம்செய்வது தவறு என்று என்று போலீசார் அறிவுறுத்தியதுடன், பெற்றோருடன் செல்லுங்கள் என்று கூறினார்கள்..
















