செல்போன்களில் சஞ்சார் சாத்தி செயலி

புதுடெல்லி: டிசம்பர் 2-
சைபர் பாது​காப்பு காரணங்​களுக்​காக சஞ்​சார் சாத்தி செயலியை புதிய செல்போன்​களில் கட்​டா​யம் நிறுவ வேண்​டும் என்று ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.
இதுகுறித்து ராய்ட்​டர்ஸ் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: உலகின் மிகப்​பெரிய தொலைத்​தொடர்பு சந்​தைகளில் ஒன்​றாக இந்​தியா உள்​ளது. இங்கு மட்​டும் 120 கோடி சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இந்த நிலை​யில், சைபர் பாது​காப்​புக்​காக மத்​திய அரசு பிரத்​தேயக​மாக உரு​வாக்​கி​யுள்ள சஞ்​சார் சாத்தி செயலியை புதிய போன்​களில் நிறு​விய பிறகே விற்​பனைக்கு அனுப்ப வேண்​டும். இதனை முன்​னணி ஸ்மார்ட்​போன் நிறு​வனங்​கள் 90 நாட்​களுக்​குள் உறுதி செய்ய வேண்​டும் என்று மத்​திய அரசின் உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.