டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ்

​சென்னை: டிசம்பர் 3-
கொச்​சி​யில் இருந்து நேற்று முன்​தினம் டெல்லி சென்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாஜக​வின் முக்​கிய பொறுப்​பாளர்​கள் சிலரை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.
அதி​முக​வில் அனை​வ​ரும் இணைந்து செயல்பட வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, அதி​முக உரிமை மீட்​புக்​குழு​வைத் தொடங்கி நிர்​வாகி​களை நியமித்து வந்த முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், பாஜக தரப்பு ஒத்​துழைக்​காத​தா​லும், பிரதமர் நரேந்​திர மோடி தமி​ழ​கம் வந்த போது சந்​திக்க இயலாத காரணத்​தா​லும், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக கடந்த ஜூலை மாதம் அறி​வித்து வெளி​யேறி​னார்.
தொடர்ந்​து, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து டிடிவி தினகரனும் வில​கி​னார். இந்​நிலை​யி்ல், அதி​முகவை ஒன்​றிணைக்க வலி​யுறுத்​திய முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டைய​னும் கட்​சி​யில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யால் நீக்​கப்​பட்​டார்.
தொடர்ந்​து, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்​கோட்​டையன் ஆகி​யோர் இணைந்து செயல்​படு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், செங்​கோட்​டையன் தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்து விட்​டார். இதற்​கிடை​யில் யாரை​யும் அதி​முக​வில் இணைக்க மாட்​டோம் என்று பழனி​சாமி கூறி​விட்​ட​தால், இணைப்பு முயற்​சிகளுக்கு வலு​வில்​லாமல் போனது.
இறு​தி​யாக, சமீபத்​தில் நிர்​வாகி​களு​டன் பேசிய ஓபிஎஸ், டிசம்​பர் 15-ம் தேதி மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்தை நடத்​தப்​போவ​தாக​வும், அதற்​குள் ஒருங்​கிணைக்க வேண்​டும், இல்​லா​விட்​டால், எங்​கள் முடிவை மக்​கள் ஏற்​கும் நிலைக்கு எங்​களை தள்​ளி​வி​டாதீர்​கள் என்று கூறி​யிருந்​தார்.இந்​நிலை​யில், அவர் தனது அதி​முக உரிமை மீட்​புக்​குழுவை மாற்​றி​விட்டு அதி​முக உரிமை மீட்​புக் கழக​மாக பதிவு செய்து கட்​சி​யாக நடத்​தப்​போவ​தாக தகவல் வெளி​யானது. இந்த சூழலில், நேற்று முன்​தினம் கேரள​ மாநிலம் கொச்​சிக்கு சிகிச்​சைக்​காக சென்ற ஓபிஎஸ், அங்​கிருந்து டெல்லி சென்​றுள்​ளார். டெல்​லி​யில் முகாமிட்​டுள்ள அவர், பாஜக தலை​வர்​கள் மற்​றும் தமிழக பொறுப்​பாளர்​கள் சிலரை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யானது. அதே நேரம், ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யும் டெல்லி சென்​றுள்​ள​தாக​வும், அவர் மூலம் ஓபிஎஸ் பாஜக தலை​வர்​களை சந்​திக்​கலாம்​,​ பாஜக கூட்​ட​ணிக்​குள் ஓபிஎஸ் மீண்​டும் வரு​வதற்கு வாய்ப்​புள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. ஒரு வேளை அதி​முக ஒன்​றிணைப்பு நடை​பெறாத பட்​சத்​தில், தனது புதிய கட்​சியை ஓபிஎஸ் பதிவு செய்ய தயா​ராக இருப்​ப​தாக​வும் கூறப்​படுகிறது.