காசி தமிழ் சங்கமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மத்திய அமைச்சர் அழைப்பு

வாராணசி: டிசம்பர் 3-
காசி தமிழ் சங்​கமத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்க வேண்​டும் என்று மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கேட்​டுக் கொண்​டார். மத்​திய கல்வி அமைச்​சகம் சார்​பில், காசி மற்​றும் தமிழகத்​தின் பண்​பாடு, ஆன்​மிகம் மற்​றும் வரலாற்​றுத் தொடர்​பு​களின் நிகழ்ச்​சிகளைப் பிர​திபலிக்​கும் வகை​யில் காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்சி ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது.
இந்த நிகழ்ச்​சியை சென்னை ஐஐடி மற்​றும் பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம் (பிஎச்​யூ) ஆகியவை இணைந்து நடத்​துகின்​றன. இதன் தொடர்ச்​சி​யாக ‘தமிழ் கற்​கலாம்’ எனும் கருப்​பொருளில் இந்த ஆண்​டுக்​கான ‘காசி தமிழ் சங்​கமம் 4.0’ நிகழ்ச்சி வாராணசி​யில் நேற்று தொடங்​கியது.
வரும் 15-ம் தேதி வரை​யான இந்த விழா​வில் பல்​வேறு தலைப்​பு​களில் அமர்​வு​கள் நடை​பெறவுள்​ளன. இந்த விழா​வைத் தொடங்​கி​வைத்து உத்​தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசும்​போது, “தமிழக கலாச்​சா​ரம் உத்​தரப் பிரதேசத்​தில் உயிர்ப்​புடன் உள்​ளது.
எங்​கள் அரசு தமிழ் உள்​ளிட்ட பல்​வேறு மொழிகளின் வளர்ச்​சிக்கு செய​லாற்றி வரு​கிறது. அந்​தவகை​யில், காசி தமிழ் சங்​கமம்தொடர்ந்து 4-வது ஆண்​டாக சிறப்​பாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​நிகழ்ச்சி வட இந்​தி​யா​வில் கலாச்​சா​ரம், பொருள​தா​ரம், சமூகப் பங்​களிப்பை மேம்​படுத்த வழி​வகை செய்​கிறது.
பிரதமர் மோடி​யின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ இலக்கை பூர்த்தி செய்​யும் வகை​யில் இது​போன்ற தொடர் முன்​னெடுப்​பு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. தென்​காசி​யில் நேற்று முன்​தினம் தொடங்​கிய வாக​னப் பயணம் 2,000 கி.மீ. கடந்து காசியை வந்​தடை​யும்” என்​றார்.மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மொழியை வைத்து வேற்​றுமையை உரு​வாக்கி வரு​கிறார்​கள். குறுகிய அரசி​யல் எண்​ணத்​துடன், அரசி​யல் லாபத்​துக்​காக இதை செய்​கின்​றனர். ஆண்​டு​தோறும் காசி தமிழ் சங்​கமத்​தில் பங்​கேற்​கும்​படி முதல்​வர் ஸ்டா​லினுக்கு கடிதம் எழுதுகிறேன்.இம்​முறை மீண்​டும் அவரை அழைக்​கிறேன். காசிக்கு வந்து பாருங்​கள். தமிழகத்​துக்​கும், காசிக்​கும் உள்ள நீண்​ட​கால தொடர்பு உங்​களுக்கு தெரிய​வரும். அதை நாங்​கள் எவ்​வாறு கொண்​டாடு​கிறோம் என்​பதை அறிய முடி​யும். எங்​களிடம் மொழிப் பாகு​பாடு இல்​லை.சுயநல சக்​தி​கள்​தான் அதை உள்​நோக்​கத்​துடன் பயன்​படுத்​துகின்​றனர். அரசி​யலில் வேண்​டுமெனிலும் இத்​தகைய செயல்​பாடு​கள் வெற்றி பெறலாம். ஆனால், மக்​களிடம் நன்​ம​திப்பை பெற​ முடி​யாது. இந்த நிகழ்ச்சி மூல​மாக தமிழகத்​துக்​கும், காசி இடையே அறி​வுப் பாலத்தை உரு​வாக்​கி​யுள்​ளோம்.பன்​மொழி கலாச்​சா​ரம் நம் நாட்​டின் பலமாகும். ஆங்​கிலேய மோகத்​தில் இருந்து வெளி​யேற மொழி​தான் முக்​கியக் காரணி​யாக இருந்​தது. அதனால், தாய்​மொழி மட்​டுமல்ல, இந்​திய மொழிகள் அனைத்​தை​யும், அனை​வரும் அறிந்து கொள்ள வேண்​டும். அதன்​படி, உத்​தரப் பிரதேச மக்​களுக்கு தமிழ் மொழியைக் கற்​பிக்​கும் முயற்​சிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் பேசி​னார்.தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசும்​போது, “காசி மற்​றும் தமிழகம் இடையே​யான உறவு பல்​லா​யிரம் ஆண்​டு​கள் பழமை​யானது. சுமார் 1,000 ஆண்​டு​களுக்கு முன்பு ராஜேந்​திர சோழன் இங்கே வந்​து, நீர் எடுத்து சென்று கங்கை கொண்ட சோழபுரத்தை கட்​டி​னார்.சனாதன தர்​மத்​தை, டெங்​கு, மலேரி​யா ​போல ஒழிப்​போம் என்று தமிழகத்​தில் சிலர் பேசி வரு​கின்​றனர். மக்​களிடம் தேவையற்ற பதற்​றத்தை ஏற்​படுத்​து​வதே இதன் நோக்​கம். பனராஸ் இந்து பல்​கலை.​யில் பார​தி​யாருக்கு இருக்கை ஏற்​படுத்தி கவுரவிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.புதுச்​சேரி ஆளுநர் கைலாச​நாதன் பேசும்​போது, “உல​கின் மிக​வும் பழமை​யான நகர​மாக காசி இருக்​கிறது. இங்கு ஆயிரம் ஆண்​டு​களுக்கு மேலாக தமிழ் மீதான அன்பு பரஸ்​பர​மாக இருந்து வரு​கிறது. காசி மக்​களின் மொழி​யில், பண்​பாட்​டில் தமிழ் அடை​யாளங்​கள் இருக்​கின்​றன. இந்த நிகழ்ச்சி தமிழகம், காசி இடையே​யான பண்​பாடு, கலாச்​சா​ரத்தை மேம்​படுத்​தும்” என்​றார். இந்​நிகழ்​வில், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முருகன், சென்னைஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி, மத்​திய செம்​மொழி தமிழாய்வு நிறுவன இயக்​குநர் ஆர்​.சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். தொடர்ந்​து, 3 இந்​திய மொழிகள் உட்பட 10 மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்ட தொல்​காப்​பி​யம் நூல் விழா​வில் வெளி​யிடப்​பட்​டது. இந்தி பயிலும் மாணவர்​கள் 15 நாட்​களில் அடிப்​படைத் தமிழை கற்​கும் வகை​யில் 5 தொகுப்​பு​கள் கொண்ட புத்​தகங்​கள்​ செம்​மொழித்​ தமிழாய்​வு நிறுவனம்​ ​சார்​பில்​ வெளியிடப்​பட்டன.