பறக்கும் ரோப் கார், சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம்:

வாராணசி, டிச. 9- காசி நகரின் கட்​டமைப்பை மேம்​படுத்த, சாலை​யில் பறக்​கும் ரோப் கார் உட்பட பல்​வேறு திட்​டங்​கள் ரூ.60,000 கோடி​யில் நடை​பெற்று வரு​வ​தாக வாராணசி மண்டல ஆணை​யர் சு.​ராஜலிங்​கம் தெரி​வித்​தார். ஆன்​மிகத்​தின் தலைநகர​மான காசி, தற்​போது நவீன கட்​டமைப்​பு​களு​டன் பிரம்​மாண்​ட​மான வளர்ச்​சியை நோக்கி பயணித்து வரு​கிறது. குறுகிய சந்​துகளும், நெரிசலான சாலைகளும் மட்​டுமே காசி​யின் அடை​யாள​மாக இருந்த நிலை மாறி, இன்று சர்​வ​தேச தரத்​திலான சாலைகள், பாலங்​கள், நதிவழிக் கப்​பல் போக்கு​வரத்து என பெரும் மாற்​றத்தை வாராணசி கண்​டுள்​ளது. நகரின் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும், பொருளா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும் சுமார் ரூ.60,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து வாராணசி மண்டல ஆணை​யரும், தமிழரு​மான சு.​ராஜலிங்​கம் நம்மிடம் கூறிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுறுத்​தலின்​படி காசி நகரத்​தில் அதன் பழமை மாறாமல் உட்​கட்​டமைப்பை மேம்​படுத்த திட்​ட​மிட்​டோம். இதற்​காக ரூ.60 ஆயிரம் கோடி​யில் ஒரு விரி​வான போக்​கு​வரத்​துத் திட்​டம் வகுக்​கப்​பட்​டது. இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​கள் ஏற்​கெனவே முடிக்​கப்​பட்டு மக்​கள் பயன்​பாட்​டுக்கு வந்​து​விட்​டன. இங்கு முன்பு வெளிவட்​டச் சாலைகள் (ரிங் ரோடு) இல்​லாத​தால் அதி​கபட்​சம் 7 மணி நேரம் வரை போக்​கு​வரத்து நெரிசல் இருந்​தது. குறிப்​பாக விமான நிலை​யத்​தில் இருந்து நகருக்​குள் வர 3 மணி நேர​மாகும். ஆனால், தற்​போது புதிய ‘ரிங் ரோடு’ மற்​றும் கங்கை நதி​யின் குறுக்கே கட்​டப்​பட்​டுள்ள பாலங்​கள் காரண​மாக பயண நேரம் 40 நிமிடங்​களாகக் குறைந்​துள்​ளன. நகரைச் சுற்​றி​லும் 6 வழிச்​சாலை​யாக ‘ரிங் ரோடு’ அமைக்​கப்​பட்​டுள்​ளது. அங்​கிருந்து நகருக்​குள் வரும் அனைத்​துச் சாலைகளும் 4 வழிச்​சாலைகளாக மாற்​றப்​பட்டு வரு​கின்​றன. அதே​போல், வாராணசி​யில் இருந்து தற்​போது 7 வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒரு நாளைக்கு 1 லட்​சம் பயணி​களை கையாளும் விதமாக ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல், முன்பு ஒரு நாளைக்கு 10 விமானங்​கள் மட்​டுமே வந்து சென்ற வாராணசி விமான நிலை​யத்​தில், தற்​போது 52 விமானங்​கள் இயக்​கப்​படு​கின்​றன. சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து: கங்கை நதியை வெறும் வழி​பாட்​டுக்கு மட்​டுமின்​றி, பொருளா​தார வளர்ச்​சிக்​கும் பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ராமநகரில் உள்​நாட்டு நீர்​வழிப் போக்​கு​வரத்​துக்​காக ஒரு சிறிய துறை​முகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.