விண்வெளித் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள்; சுபான்ஷூ சுக்லா

கோல்கட்டா: ‘டிசம்பர் 11-
’இந்தியா, விண்வெளித் துறையில் லட்சியங்களை விரிவுபடுத்தி வருவதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்,’ என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
ஆக்சியம்-4 திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா ஆவார். 18 நாள் பயணத்திற்குப் பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இவர் கோல்கட்டாவில் ஒரு நிகழ்வில் பள்ளி மாணவர்களுடன் பேசியதாவது:41 ஆண்டு கால இடை வெளிக்குப் பிறகு மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது.
விண்வெளி என்பது இருப்பதற்கு ஒரு சிறந்த இடம். அது ஆழ்ந்த அமைதியையும், காலப்போக்கில் மேலும் வசீகரிக்கும். அற்புதமான காட்சியையும் கொண்டது.
நீங்கள் எவ்வளவு காலம் அங்கிருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அதை அனுபவிப்பீர்கள். உண்மையில், நான் திரும்பி வர விரும்பவில்லை. விண்வெளி பயணத்தில் பெற்ற நேரடி
அனுபவம், தான் பயிற்சியின் போது கற்றுக்கொண்டவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்தியாவின் விண்வெளி அறிவியலின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையப் பயணம் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமானது.
நாட்டின் விண்வெளி லட்சியங்களில் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம், பாரதிய நிலையம் (இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்), மற்றும் இறுதியில் நிலவில் மனிதன் தரையிறங்குவது ஆகியவை அடங்கும்.நிலவுப் பயணம் 2040ம் ஆண்டை இலக்காகக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.அடுத்த 10-20 ஆண்டுகளில் இந்தத் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும். இந்த இலக்குகள் சவாலானவை என்றாலும், அவை உங்களைப் போன்றவர்களால் அடையக்கூடியவை.சிறந்த நாடு
இந்தியா தனது மனித விண்வெளிப் பயணத் திறன்களை விரிவுபடுத்துவதால், இந்தத் துறை ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் இளைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள். அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆர்வத்துடன் இருக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.