
புதுடெல்லி, டிச. 25- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: டெல்லி மெட்ரோவின் 5(ஏ)-ம் கட்ட திட்டத்தின் கீழ் 3 புதிய வழித்தடங்களை கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த திட்டம் ரூ.12,014.91 கோடியில் செயல்படுத்தப்படும். இதற்கான நிதியை, மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

















