தேசிய எழுச்சி தலம்; உ.பி., லக்னோவில் திறப்பு

லக்னோ, டிச. 26- மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101வது பிறந்த நாளையொட்டி, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் அவரது வாழ்வையும், சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் வகையி ல் அமைக்கப்பட்டுள்ள, ‘ராஷ்டிர பிரேர்னா ஸ்தல்’ என்றழைக்கப்படும் , தேசிய எழுச்சிதலத்தை பிரதமர் நரேந்திர மோ டி நேற்று திறந்து வைத்தார். உ.பி.,யின் லக்னோவில், 230 கோடி ரூபாய் செலவில், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள இந்த இடத்தில், வாஜ்பாய் உட்பட பா.ஜ.,வின் சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய் ஆகிய மூன்று பேரின், 65 அடி உயர வெண்கல சிலைகளையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இங்கு, தலைவர்களின் தலைமைப் பண்பு, தேசத்துக்கு ஆற்றிய சேவைகள் உள் ளிட்டவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே கலாசார உணர்வை ஏற்படுத்தி உத்வேகம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இத்தலம், தேசிய நினைவுச் சின்னமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எழுச்சி தலம், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 98,000 சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவில் அதிநவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், டிஜிட்டல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தேச தலைவர்களின் பங்களிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.