பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில்

சென்னை: ஜனவரி 12-
மெட்ரோ ரயில் திட்​டப் பணி​கள் சென்​னை​யில் 2-ம் கட்​ட​மாக, 3 வழித்​தடங்​களில் 116 கி.மீ. தூரத்​துக்கு நடந்து வரு​கின்​றன.
இதில், கலங்​கரை​விளக்​கம் – பூந்​தமல்லி வரையி​லான 4-வது வழித்​தடத்​தில் (26 கி.மீ.) பூந்​தமல்லி – போரூர் சந்​திப்பு இடையே 10 கி.மீ. தூரத்​துக்கு அனைத்து கட்ட சோதனைப் பணி​களும் முடிந்​துள்​ளன.
இந்த நிலை​யில், போரூர் – வடபழனி இடையே கட்​டமைப்​பு​கள், சிக்​னல் தொழில்​நுட்​பம், உயர்​மட்ட மின்​பாதை பணி​கள் நிறைவடைந்​ததை அடுத்​து, இந்த தடத்​தின் ஒரு மார்க்​கத்​தில் நேற்று சோதனை ஓட்​டம் நடை​பெற்​றது.
மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் பங்​கேற்​று, தண்​ட​வாள செயல் திறன், சிக்​னலிங் அமைப்பு உட்பட பல்​வேறு ஆய்​வு​களை மேற்​கொண்​டனர்.
இந்த சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக முடிந்​தது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்​வாக இயக்​குநர் சித்​திக் கூறிய​தாவது: போரூர் – வடபழனி இடையே ஒருமார்க்​கத்​தில் சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக நடை​பெற்​றுள்​ளது.
பூந்​தமல்​லி​யில் இருந்து வடபழனி வரை ரயில் பாதை அமைத்​து, போக்​கு​வரத்து இணைப்பு கொடுத்​தால் மக்​களுக்கு அதிக பயனுள்​ள​தாக இருக்​கும். பூந்​தமல்​லி, போரூரில் இருந்து வரும் பயணி​கள் வடபழனி​யில் இறங்​கி, சென்ட்​ரல், விம்கோ நகர் உட்பட பல்​வேறு பகு​தி​களுக்கு செல்​லலாம்.
பூந்​தமல்லி – போரூர் தடத்​தில் ஏற்​கெனவே சோதனை ஓட்​டம் நடத்தி முடிக்​கப்​பட்ட நிலை​யில், ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் ஆய்வு செய்​து, சான்​றிதழ் கொடுப்​பார்.
அதன் பிறகு, ரயில்வே வாரி​யம் அனு​மதி வழங்​கியதும், பூந்​தமல்லி-வடபழனி தடத்​தில் மெட்ரோ ரயில் பிப்​ர​வரி முதல் முழு​மை​யாக தொடங்​கும் என எதிர்​பார்க்​கிறோம். இந்த தடத்​தில் அடுத்த 4, 5 மாதங்​களில் ரயில் நிலை​யங்​களை படிப்​படி​யாக தயார்​செய்​து, இணைப்பு கொடுப்​போம். அதன்பிறகு வழக்​க​மான சேவை தொடங்​கும்.வரும் ஜூனில் பவர் ஹவுஸ் வரை பணி​கள் முடிந்​து​விடும். மதுரை, கோவை மெட்ரோ மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்​டங்​கள் இது​வரை கைவிடப்​பட​வில்​லை.
நாங்​கள் மேலும் சில விவரங்​களை சேர்த்து அனுப்பி உள்​ளோம்.
நிலம் கையகப்​படுத்​துதலில் முதல் செயல்​முறையை செய்​கிறோம். மதுரை​யில் நில திட்ட அட்​ட​வணை தயா​ராகி​விட்​டது. கோவை​யில் ஒரு மாதத்​தில் அட்​ட​வணை தயா​ராகி​விடும் என்றனர்.