விஜய் குறித்து – பழனிசாமி கேள்வி

சேலம் ஜனவரி 30-
சேலம் மாவட்​டம் ஓமலூரில் அதி​முக கட்சி அலு​வல​கத்​தில் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்​தவர்​கள் அதி​முக-​வில் இணை​யும் நிகழ்வு நேற்று நடந்​தது. இதில் பங்​கேற்ற கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:
பல்​வேறு கட்​சிகளில் இருந்து விலகி அதி​முக-​வில் பலரும் சேர்ந்து வரு​கின்​ற​னர். அதி​முக-​வின் வெற்றி பிர​காச​மாக உள்​ளது. அதி​முக பொதுக்​குழு​வில் ஏகமன​தாக எடுக்​கப்​பட்ட முடி​வின்​படி ஓபிஎஸ் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டிருக்​கி​றார். அதி​முக-வுக்கு துரோகம் இழைத்​தவர் என்​ப​தால் பொதுக்​குழு கூடி முடி​வெடுத்​து, அடிப்​படை உறுப்​பினர் பதவி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார் என்​ப​தால் மீண்​டும் அவரை கட்​சிக்​குள் இணைக்க வாய்ப்​பில்​லை. அது, 2,500-க்​கும் மேற்​பட்ட பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கூடி எடுத்த நடவடிக்​கை; பொதுச்​செய​லா​ளர் எடுத்த நடவடிக்கை இல்​லை. வரும் தேர்​தலில் அதி​முக தான் வெற்​றி​பெற்று ஆட்சி அமைக்​கும்.
இன்​னும் பல கட்​சிகள் அதி​முக கூட்​ட​ணிக்கு வர வாய்ப்​பிருக்​கிறது. பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது. கூட்​டணி இறுதி செய்​யப்​பட்​ட​வுடன் முறை​யாக அறி​விப்​போம். யாருக்கு எத்​தனை சீட், எந்​தெந்த தொகு​தி​கள் என்​பது பின்​னர் அறிவிக்​கப்​படும்.
திமுக அரசை அகற்ற வேண்​டும் என்று மக்​கள் முடிவு செய்து விட்​டார்​கள். அதி​முக ஆட்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட திட்​டங்​கள் மக்​களுக்​கான​தாக இருந்​தது. ஆனால், திமுக ஆட்​சி​யில் தினம்​தோறும் போட்டோ ஷூட் மட்​டும் நடக்​கிறது. அத்​துடன் அது முடிந்து விடு​கிறது. திட்​டங்​களை நிறை​வேற்ற 52 குழுக்​களை போட்ட நிலை​யில், வெள்ளை அறிக்கை கேட்​டால் விளக்​கம் இல்​லை. வெற்று அறி​விப்​பு​களை விட்டு கவர்ச்​சிகர​மாக திட்​டங்​களை அறி​வித்​து, மக்​களை ஏமாற்றி ஊழல் அரசாக திமுக அரசு உள்​ளது. திமுக அரசில் ரூ.4 லட்​சம் கோடிக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்​துள்​ளோம்.
2026-2027 நிதி​யாண்​டுக்​கான திட்​டங்​களுக்கு சட்​டப்​பேரவை ஒப்​புதல் பெறாமல் திட்​டத்​திற்கு நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளனர். விதி​களை மீறி முறை​கேடு நடை​பெற்​றுள்​ளது. முறை​கேடுகளை எவ்​வித அச்​ச​மும் இல்​லாமல் செய்​கி​றார்​கள். அதி​முக ஆட்​சிக்கு வந்​தவுடன் விதி​முறைக்கு முரணாக விடப்​பட்ட டெண்​டர்​கள் ரத்து செய்​யப்​படும். நிரந்தர டிஜிபி-யைக் கூட நியமிக்​காமல் பொறுப்​பற்ற அரசாக திமுக அரசு உள்​ளது.