ஒடிசாவில் தலித் சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு

புவனேஸ்வர்: பிப்ரவரி 16-
ஒடிசாவில், அங்​கன்​வாடி மையத்​தில் சமையலராகப் பணி​யமர்த்​தப்​பட்ட தலித் பெண்​ணுக்கு எதி​ராக கிராம மக்​களின் சமூகப் புறக்​கணிப்பு அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்​ளது.
நுவாகோன் கிராமத்​தைச் சேர்ந்த 21 வயது பட்​ட​தா​ரிப் பெண் சர்மிஸ்தா சேத்​தி. அரசு வேலை பெற்று, உள்​ளூர் அங்​கன்​வாடி மையத்​தில் சமையல் உதவி​யாளர் பணிக்கு விண்​ணப்​பித்து தேர்வா​னார். ஆனால், அவர் தலித் சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்பதால், அவர் சமைக்​கும் உணவை தங்​கள் குழந்​தைகள் உண்ணக் கூடாது எனக்​கூறி மற்ற பிரிவினர் கடந்த நான்கு மாதங்களாக குழந்​தைகளை அங்​கன்​வாடிக்கு அனுப்ப மறுத்து வரு​கின்​றனர்.
இது குறித்து சர்​மிஸ்தா கூறுகை​யில், “நான் பணி​யில் சேர்ந்த நாள் முதல் கிராம மக்​கள் எங்​களை ஒதுக்கி வைத்​துள்​ளனர். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு மையத்​திற்​குச் சென்​று, பெருக்கி சுத்​தம் செய்​து​விட்டு குழந்​தைகளுக்​காகக் காத்திருக்கிறேன். ஆனால் தலித் சமூகத்​தைச் சேர்ந்த இரண்டு குழந்​தைகளைத் தவிர வேறு யாரும் வரு​வ​தில்​லை. அங்​கன்​வாடி மூலம் வழங்​கப்​படும் சத்​துணவுப் பொருட்​களைக் கூட வாங்க மறுக்​கின்​றனர்” என வேதனை​யுடன் தெரி​வித்​தார்.
இந்​தச் சிக்​கலைத் தீர்க்க மாவட்​டத் துணை ஆட்​சி​யர் அருண் குமார் நாயக் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது. கிராம மக்​களின் மனப்​போக்கை மாற்​றும் முயற்​சி​யாக, அந்​தப் பெண் சமைத்த உணவை அதி​காரி​களே உண்டு காண்​பிக்​கத் திட்ட​மிட்​டுள்​ளனர். எனினும், கிராம மக்​கள் தங்​களது பிடிவாதத்தைக் கைவி​டா​விட்​டால் சட்ட ரீதி​யான கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.
ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​து, கடின உழைப்​பால் பட்டப்படிப்பு முடித்த ஒரு இளம்​பெண், தனது சொந்த ஊரிலேயே சா​தி​யப் பாகு​பாட்​டால் புறக்​கணிக்​கப்​படு​வது சமூக ஆர்வலர்களிடையே கவலை​யை ஏற்​படுத்​தியுள்​ளது.