ராஜஸ்தானில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ​​பிப்ரவரி 17-
ராஜஸ்​தானில் சட்​ட​விரோத பட்​டாசு ஆலை​யில் ஏற்பட்ட பயங்கர வெடி​விபத்​தில் 8 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.
ராஜஸ்​தானின் அல்​வார் மாவட்​டம், பிவாடி தொழிற்​பேட்​டை​யில் மூடப்​பட்ட ஒரு தொழிற்​சாலை​யில் சட்​ட​ விரோத​மாக பட்​டாசு ஆலை இயங்கி வந்​துள்​ளது. இங்​குள்ள ஒரு கட்​டிடத்​தில் நேற்று காலை​யில் திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்​டிடங்​களுக்​கும் தீ வேக​மாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்​பட்​டது.
விபத்​தின் ​போது அந்த ஆலை​யில் சுமார் 25 தொழிலா​ளர்​கள் இருந்​த​தாக​வும் இவர்​கள் பிஹார் மற்​றும் உ.பி.யை சேர்ந்​தவர்​கள் எனவும் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த விபத்​தில் 8 தொழிலாளர்​கள் உயி​ரிழந்​தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து அரு​கில் உள்ள ஆலைகளில் இருந்த தொழிலா​ளர்​கள் பாது​காப்பு கருதி வெளியேற்​றப்​பட்​டனர். அப்​பகு​தி​யில் தற்​காலிக​மாக மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டது.
தீயை அணைக்​கும் பணி​யில் 6 தீயணைப்பு வாக​னங்​கள் ஈடுபடுத்​தப்​பட்​டன. தீயணைப்பு வீரர்​கள் நீண்​டநேரம் போராடி தீயை கட்​டுப்​படுத்​தினர். தொழிற்​சாலை கட்​டிடத்தை குத்தகைக்கு எடுத்​தவர், அதன் உரிமை​யாள​ருக்கு தெரி​யாமல் அங்கு பட்​டாசு தயாரித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்பாக போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து விசாரிக்கின்றனர்​.