மதுரை வேலூர் பிரச்சாரக் கூட்டடங்களில் பிரதமர்​ மோடி பங்கேற்பு

சென்னை: பிப்ரவரி 18-
பிரதமர் மோடி அடுத்த மாதம் இரு​முறை தமிழகத்​தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் பிரச்​சா​ரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்​டு, தமிழகத்​தில் பாஜக தனது கூட்​ட​ணிக் கட்​டமைப்பை வலுப்​படுத்​து​வ​தி​லும், புதிய கூட்​ட​ணிக் கட்​சிகளை ஈர்ப்​ப​தி​லும் முழு வீச்​சில் ஈடு​பட்டு வரு​கிறது.
இந்​நிலை​யில், ஏற்​கெனவே கடந்த மாதம் மது​ராந்​தகத்​தில் நடை​பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் (என்​டிஏ) பொதுக்​கூட்​டத்​தின் மூலம் பிரதமர் மோடி தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார்.
இதைத்​தொடர்ந்​து, அடுத்த மாதம் இரு​முறை தமிழகத்​தில் சூறாவளிப் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். மார்ச் 1-ம் தேதி மதுரை​யில் நடை​பெறும் பொதுக் ​கூட்​டத்​தில் பங்​கேற்​கிறார். இக்​கூட்​டத்​தில் கூட்ட​ணி​யின் தற்​போ தை​யத் தலை​வர்​களு​டன், புதி​தாக இணை​ய​ உள்ள கட்​சித் தலை​வர்களும் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
இது அரசியல் வட்​டாரத்​தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மதுரையைத் தொடர்ந்​து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடை​பெறும் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பிரதமர் உரை​யாற்​றுகிறார். பிரதமரின் இந்​தப் பயணங்​களை ஒருங்​கிணைக்க, மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தலை​மை​யில் மாநில அளவி​லான சிறப்​புக் குழுக்களை கட்சித் தலைமை அமைத்துள்​ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடியின் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிகளை பொறுப்​பேற்று வழிநடத்த மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தலை​மை​யில் மாநில அளவில் குழு அமைக்​கப்​படு​கிறது.
அந்​த வகை​யில், மதுரை பயணத்​துக்கு பொறுப்​பாளர்​களாக மாநில பொதுச் செய​லா​ளர்​கள் எம்​.​முரு​கானந்​தம், ராம சீனி​வாசன், பொன் வி.​பால​கணபதி ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர்.
இதே​போல், வேலூர் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிக்கு பொறுப்​பாளர்​களாக மாநில துணை தலை​வர் கரு.​நாக​ராஜன், மாநில பொதுச் செய​லா​ளர் கார்த்​தி​யா​யினி, மாநில செய​லா​ளர் வெங்​கடேசன் ஆகியோர் நியமிக்​கப்​படு​கின்​றனர். இவ்​​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.
இந்​நிலை​யில், பாது​காப்பு ஏற்​​பாடு​கள், கூட்​ட​ணிக் கட்​சிகளு​ட​னான ஆலோ​சனை​கள் மற்​றும் தொண்​டர்​களைத் திரட்​டு​வது போன்ற பணி​களை இந்​தக்குழு தற்​போது துரிதப்​படுத்​தி உள்​ளது.